முகப்பு...

Thursday 2 August 2012

உணர்வுகள்...??


உன் மௌனம்
எனை மரணிக்கச்செய்ய
உள்ளத்தால் மரணித்து...

நின் நினைவில்
நினைவிழந்து
கொதிக்கும் நீரில் கைவிட
குளிர்கிறது...

என் குரல் கேட்கவிரும்பா உனை
குளிர்விக்க குளிர்பானமாய் கொதிக்கும்
பாலருந்துகிறேன்...

செய்தியனுப்பும் விரல்களோ
கத்தியை முத்தமிட
கசியும் குருதியோ..
என் கண்ணீரை கேளி செய்ய..

உன்கைபட்ட புடவையும்..
கதைகளாயிரம் கூற...
காதலுடன் கட்டியணைத்து
முத்தமிடுகிறேன் நித்தமும்.....

நீ விரும்பும் மௌனத்தை
நானும் தரிக்கிறேன்
மரணித்தவளுக்கு
மௌனிப்பதும் கடினமா ...??

நடுவீதியில் நிர்வாணமாய்
உணர்த்தும் உன் அலட்சியம்...

உணர்வை உணர்வால் உணர்ந்தவள்
ஊமைகண்ட கனவாய்
உணர்வை வெளிப்படுத்தும்
வார்த்தை ஜாலமறியாப் பேதையாய்...

நின்காதலில் கசிந்துருகும்
எனை சோதிப்பது
காலமா...?? காதலா..??
என் காதலா...!!!??

14 comments:

  1. வித்தியாசமான வரிகள்...

    முடிவு - காலம் தான்....

    ReplyDelete
    Replies
    1. தங்களது தொடர்ந்த வருகையும், வாழ்த்தும் என் எழுத்தை வளப்படுத்தட்டும்..:)

      Delete
  2. செய்தியனுப்பும் விரல்களோ
    கத்தியை முத்தமிட
    கசியும் குருதியோ..
    என் கண்ணீரை கேளி செய்ய..
    --------------------

    அருமை அக்கா...
    நிறைய வரிகளை ரசித்தேன். ரசித்ததில் பிடித்ததுதான் மேல இருக்கும் வரிகள்...

    ReplyDelete
    Replies
    1. ஹஹ்ஹா...கத்தியில முத்தமிடறத ரசிக்கிறியா..நன்றி தம்பி..:):)

      Delete
  3. அருமையான காதல் ஏக்க கவிதை! வாழ்த்துக்கள்!

    இன்று என் தளத்தில் இப்படித்தான் சாவேன்! பாப்பாமலர்!http://thalirssb.blogspot.in

    ReplyDelete
  4. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

    வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_30.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. அப்படியா...நன்றி சகோ..பார்க்கிறேன்..தாங்கள் அளிக்கும் தொடர்ந்த ஊக்கத்திற்கு நன்றியும், மகிழ்ச்சியும் சகோ.:)

      Delete
  5. உங்கள் தளத்தை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன்
    http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_30.html
    என் தளம்
    http://kovaimusaraladevi.blogspot.in/

    ReplyDelete
    Replies
    1. எம்மை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றியும், மகிழ்ச்சியும்..தொடர்ந்து வருகை தந்து ஊக்குவிக்கவும்..நன்றி தங்கள் வலைத்தளம் பார்வையிடுகிறேன்..வாழ்க வளமுடன்.

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__