முகப்பு...

Wednesday 29 August 2012

சிதறல்கள்..


உன்
அழைப்பில்லா
என் அலைபேசியும்
மௌனித்ததே சோகத்தில்....:(:(
**********
நீ
உன் மனதை
எனக்கு
திறப்பதற்குள்
காலனும்
எனைக் காதலித்து விடுவானோ...???
**********

நீ
உன் மனதில்
இடமளிக்காமல்,
என் மனதை
ஆக்கிரமித்து
ஆளுமை செய்யும்
காதல் அராஜகத்தை
எங்கு கற்றாய்....??
********** 

உன்னுடன் பேசா
ஒரு நொடியும்..
யுகமாய்
எனக்கு....
**********
நம்பியவன்
சந்தேகிக்க..
நிர்வாணமாய்
உணருகிறேன் நானும்....
**********
நீதானே மௌனமிருக்கிறாய்..??
உன்னுடன் சேர்ந்து
என் அலைபேசியும் மௌனிக்கிறதே..??.!!
**********
எனக்கு காது கேளாதோவென
சந்தேகிக்கிறேன்...
உன் குரல் கேட்காததால்....!!
**********

5 comments:

  1. Simply Superb...புதுக்கவிதையையும் ரசிக்க முடியும் என்பதை உங்கள் கவிதைகளில்தான் உணர்ந்தேன்... வெகு எளிமையான நடையில் ஆழமான அர்த்தங்களுடன் கூடிய சாதாரண வார்த்தைகளின் கோர்ப்பு... நல்ல திறன்... இன்னும் நிறைய எழுதுங்கள்... Keep it up...

    ReplyDelete
    Replies
    1. நல்வரவு தோழமையே...மிக்க மகிழ்ச்சி..தங்கள் வாழ்த்து எமது எழுத்தை செம்மை படுத்தட்டும்..:)

      Delete
  2. நல்லதொரு சிந்தனை வரிகள்...

    முடிவில் மூன்று வரிகளை அருமையாக முடித்துள்ளீர்கள்... நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__