முகப்பு...

Wednesday 6 June 2018

அறிந்தும்-அறியாமலும்...

ஒருவர் செய்த ஏதோ ஒரு தவறுக்காகவோ அல்லது எண்ணற்ற தவறுகளுக்காகவோ சீ என உதறித்தள்ளி விலகிச்செல்ல ஒரு நொடிபோதுமானதாகவிருக்க., விலக்கிவைத்து விலகி நிற்பதால் சாதிக்கப்போவது என்னவென்று உள்ளெழும் கேள்வியால் வாழ்வின் யதார்த்தம் உணர்த்தப்படும் அந்த நொடி இறங்கிச்சென்று நெருங்கிச் செல்பவரை... வாழ்க்கைப்படிக்கட்டுகளில் ஏதோ ஒரு நேரத்தில்.. இயலாமையெனப் பார்க்கவைக்கலாம் காலம்.

******
#வாழ்க்கைப்பாதையில்.. இறங்கிவருதலை இயலாமை என நினைப்பவர்கள், அது அன்பின் காரணமாகவும் இருக்கலாம் என்பதை உணரத்தவறுகிறோமோ...!??  
#அறிந்தும்_அறியாமலும்...


********

அவனதிகாரம்...

#அவனதிகாரம்... 

அவனுக்களிக்க மானசீகமாய் முத்த ஒத்திகை பார்ப்பவளின் மனம் படித்தவனாய், இதழுக்கு ஓய்வளிக்க தன் கன்னத்தில் இடமளிக்கிறான்.