முகப்பு...

Thursday 29 December 2011

வண்ணக்கோலங்கள்.....!!!!



மார்கழி மாதமிது..
அதிகாலைப் பொழுது...

அரைகுறை தூக்கத்தில் விழித்து...
அம்சமாய் வாசல் கூட்டி,
சாணம் தெளித்து..


நான் வண்ணக்கோலமிடத் தொடங்க..
நிலவானவள்
தன் தூக்கம் தொலைந்ததையும் மறந்து.
வேடிக்கை பார்க்க...

புள்ளி வைத்த பூக்கோலம்,  சிக்குக்கோலம்..
புள்ளியில்லா ரங்கோலி,
படிக்கோலம்...

நடனமிடும் மயில் கோலம்...
கற்பனையில் முயலுக்கு வண்ணம் தீட்டி.,
வண்ண மயமான முயல் குட்டிகளை ஓடவிட...

சரஸ்வதி, கோமாதா, லட்சுமியும்..
கோலவடிவில் என் வீட்டில் குடியேற

தரையில் நீந்தும் மீன்கள்.,
பூமியில் பூத்த வண்ணத் தாமிரை, ரோசா   
கோல வடிவில் வட்டமிடும் வண்ணத்துப்பூச்சி.,

என என் வீட்டு வாசலில் கற்பனைகளை சிதறவிட...

திருஷ்டிக்காக...பசும்சாணம் எடுத்து
அதில் பரங்கிப்பூவை அமர்த்தி.,
விடிந்தது கூடத் தெரியாமல்..
வித விதமாய் அலங்கரிக்க..

விழாக்கோலமாய் காட்சியளிக்கும்.,
வண்ணக்கோலங்களைக் கண்ட
நிலவுமகள் வெட்கி மறைய..

இவ்வழகைக் கண்டு ரசிக்க
கதிரவனும் தன் கண் திறக்கிறான்...
நானும் கண் விழிக்கிறேன்..
ஓ! நான் கண்டது கனவா...??!!

ஆடம்பர வாழ்க்கையில்,
அடுக்குமாடிக் கட்டிடத்தில்
இரண்டுக்கு மூன்றடி வாசலிலே..
சாணம் தெளிப்பதெப்படி. வண்ணக்கோலமிடுவதெப்படி...
இரண்டு நிமிடத்தில் இருபது முறை
மாடியேறி, இறங்கும் அண்டை, அசலார்..
இங்கு..
இரண்டு மணி நேரம்.,
கோலமிடுவதும் சாத்தியமா..??

நான் கண்ட விழாக்கோலம்
கிட்டாமல் இறந்தகாலமாய்ப் போனதே..
எனதருமை மகளுக்கு....??















No comments:

Post a Comment

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__