முகப்பு...

Tuesday 20 January 2015

முரண்....

விதைக்கப்படும் அன்பு 
அன்பாக சிலநேரமும், 
கோபமும், வெறுப்புமாக சிலநேரமும் 
அறுவடைசெய்யப்பட..

விதைக்கப்பட்ட வெறுப்பும், கோபமும் 
அன்பாக சிலநேரமும், 
வெறுப்பும், கோபமுமாகவே சிலநேரமும் 
அறுவடைசெய்யப்பட...
அறுவடை.. 
விதைக்கப்படும் 
விதையைப் பொறுத்தில்லாமல்
விதைக்கப்படும் 
நிலத்தின் தன்மைக்கேற்பவே அமை(யும்)கிறது...
‪#‎சிலபலநேரங்களில்‬..

Monday 19 January 2015

அவனதிகாரம்...

என் மரணத்தை ஒத்திவைக்கும் அருமருந்து அவனுடைய அன்பு குரல் ..:) ;)
***
யாதுமாய் யாவற்றிலும் தோன்றி எனை ஆட்கொள்ளும் யாதுமானவன்.<3 <smile emoticon<
**
மௌனத்தால் கொன்று, வார்த்தைகளால் கொள்பவன். :P
***
அவன், வாழ்வியலின் அழகியலை இரசிக்க கற்றுக்கொடுப்பவன். :D
***
அவன் தன் கோபத்திலும் அன்பை வெளிப்படுத்தும் அற்புதன். :) 
**
அவன் தன் கொந்தளிக்கும் கோபத்தையும் மௌனத்தில் வெளிப்படுத்தும் அழகியல் கற்றவன். :)
**
அவன் என் மௌனத்தையும், மொழிபெயர்க்கும் வித்தகன். :) <3

***

Tuesday 13 January 2015

சிந்தனை முரண்..

பிரசவிக்கப்படும் வார்த்தை குழந்தைகள் 
சில நேரங்களில் மட்டற்ற மகிழ்ச்சியையும், 
சில நேரங்களில் மரணவேதனையையும் அளித்து 
இறவாத்தன்மை பெறுகின்றன..!
********
சிந்தனைகள் துளிர்த்து தளிர்களாய் 
சிலநேரம்...
உதிர்ந்து மடியும் சருகுகளாய் 
சிலநேரம....:)
***
பிறரின் குறைகளை சுட்டிக்காட்டும் மனம் 
தன் குறைகளை யாரும் சுட்டிக்காட்ட விரும்பாத மனம்..:)
***
துரோகத்தின் வண்ணம் 
தெறிக்கப்பட்ட
முகமனைத்தையும்
நிராகரிக்கிறது மனம்...
முகத்திரை 
கிழித்தெறியப்பட்டு
நிரூபிக்கப்படுவதற்கு
காத்திராமலே...!!

********
மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் மனதை 
அலட்சிய வார்த்தைகளால்...
துவண்டு போகச் செய்யவும்., 
துவண்டிருக்கும் மனதை 
அன்பு வார்த்தைகளால் 
மகிழ்ச்சியில் மலரச்செய்யவும் 
அன்புடையவர்களுக்கே சாத்தியமாகிறது, 
****