முகப்பு...

Thursday 4 August 2016

அறிந்தும்_அறியாமலும்...


எங்கோ எவராலோ விதைக்கப்பட்ட குரூரத்தின் விதை வளர்ந்து மரமாகி அதன் கனிகளையும் கொடுக்கத்துவங்க... கனிகளை சுவைக்கவும் மனம் விரும்பாது, ஆங்காங்கு வளர்ந்திருக்கும் குரூர மரங்களையும் வெட்டிவீழ்த்துவது எங்ஙனம் என அறியாது மனம் பதைத்தபடியே தொடர்கிறது(தோ) வாழ்க்கைப் பயணம்...!?? 

******************

வாழ்க்கைப் பாதையில் ‪#‎சிலபல_நேரங்களில்‬... அன்றைய தினத்தை இனிமையாக்கிக் கொள்வதை விடுத்து ஒவ்வொரு சொல்லிலும் , செயலிலும் தன் அறிவை நிரூபித்துத் தன்னை அறிவாளியாகக் காட்டிக்கொள்வதிலும், ஞானியென கூறிக்கொள்வதிலுமே பலரது நாட்கள் செலவழிக்கப்படுகின்றன(வோ).! 

****************

வாழ்க்கைப்பாதையில்...
என்றோ ஒரு நாள், யாரோ ஒருவர் பெருமைக்குரியவராய் விளங்கப்படலாம் என்பதையறிந்து, ‪#‎சிலபல_நேரங்களில்‬... அவருக்காகவே., அவர் மீதெறிய 
ஒரு கைப்பிடியளவேனும் சகதியை யாரேனும் சேமித்து வைத்திருக்க நேரிடலாம்  #‎அறிந்தும்_அறியாமலும்‬...