எனக்கு அகரம் கற்பித்து முதல் ஆசானாய் விளங்கிய என் அன்னைக்கும், இவ்வுலகை எனக்கு அறிமுகப்படுத்தி இன்றுவரை ஆசானாய் விளங்கிவரும் தந்தைக்கும், பாசங்களைக் கற்றுக்கொடுத்த உடன்பிறப்புகளுக்கும், கல்வி மட்டுமன்றி பல கலைகளையும் கற்றுக்கொடுத்த பள்ளி ஆசிரியர்களுக்கும் {குறிப்பாக ஆசிரியை சாவித்திரி எங்களுக்கு பூத்தொடுக்கவும், தலை பின்னுவதற்கும், சேமிக்கவும் வகுப்பில் சொல்லி கொடுத்தார்} தட்டச்சு, சுருக்கெழுத்து, கணினி என கற்பித்த ஆசிரியர்களுக்கும், நட்பெனும் பாடத்தை நாளும் கற்பித்துவரும் நண்பர்களுக்கும், வாழ்க்கைப்பாடத்தை வாரி வழங்கிவரும் உறவுகளுக்கும், இல்லறத்தை நல்லறமாய் கற்பிக்கும் இல்லத்தாருக்கும், எம்மை எழுதத்தூண்டிய உறவிற்கும், எமது எழுத்துக்களில் உள்ள குறைகளை மனம் வருந்தாமல் குறிப்பால் கோடிட்டுக்காண்பித்து எம் பிழைகளை திருத்தி ஆசானாய் விளங்கும் நட்புறவிற்கும், எமது எழுத்துக்களில் ஆங்காங்கே குறை கண்டிடினும் நிறைகளைக் குறிப்பிட்டு எமை ஊக்கப்படுத்தி ஆசானாய் விளங்கும் தோழமைகளுக்கும், குறைகளை நேரிடையாக எடுத்தியம்பி எம் எழுத்துக்களை நான் செம்மைப்படுத்திக்கொள்ள உதவியாக இருந்து ஆசானாய் விளங்கிவரும் தோழமைகளுக்கும் , கற்றுக்கொடுக்க வயது தடையில்லை என எம்மை விட வயதில் குறைவானாலும் எமது சந்தேகங்களை அவ்வப்பொழுது தீர்த்துவைக்கும் இணையத்து சகோதரர்களுக்கும் இப்படி என் வாழ்வின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நான் வாழ்க்கையெனும் மரத்தில் வெற்றிக்கனியைப் பறிக்க ஏணிப்படிகளாய் இருந்து ஆசானாக விளங்கிவரும் அனைவருக்கும் இந்த ஆசிரியர் தினத்தில் எமது நெஞ்சார்ந்த நன்றியினையும், வணக்கங்களையும் சமர்ப்பிக்கிறேன்..
தன்னை மெழுகுவர்த்தியாக ஆக்கி வாழ்ந்த / வாழ்கின்ற அனைத்து ஆசிரியர்களுக்கும்...
ReplyDeleteஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்... நன்றிகள்...
நன்றி சகோ.
Deleteஅருமை தோழி உணர்வு பூர்வமான வாழ்த்துகளுக்கு என் வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்திற்கு நன்றி தோழி..:)
Deleteஅனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
பழஞ்சோறு! அழகான கிழவி!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_5.html
நன்றி தோழரே..:)
DeleteWhat's up, after reading this amazing paragraph i am as well
ReplyDeletecheerful to sare my familiarity here with friends.
நன்றி :)
Delete