முகப்பு...

Sunday 30 September 2012

முரண்பட்ட சிந்தனைகள்...


அளவுகடந்த மகிழ்ச்சியிலும் உணவைத் தவிர்க்கும் மனம்.
அளவுகடந்த துன்பத்திலும்  உணவைத் தவிர்க்கும் மனம்.
*****
அன்புசெலுத்துபவர்களையும் வெறுப்புடன் நோக்கும் மனம்..
வெறுப்பவரையும் அன்புடன் ஏற்கும்  மனம் .
*****
மருமகன் தனக்கு மகனாக விளங்கும்போது
மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் தாயின் மனம்....
தன் மகன், இன்னொரு தாய்க்கு (மரு)மகனாக
விளங்கும்போது, ஏற்க மறுக்கும்  மனம்..
*****
மனைவி இறக்க மணமகன் வேடமேற்கும் ஆணின் மனம்.
கணவன் இறக்க கைம்பெண் வேடமணியும் பெண்ணின் மனம்..
*****






9 comments:

  1. நல்ல கவிதை. சிந்தனைகள் நயமாகவுள்ளன.

    ReplyDelete
    Replies
    1. வாங்க தோழரே...வருகைக்கும், கருத்திற்கும் மகிழ்ச்சியும், நன்றியும்..:)

      Delete
  2. கணந்தோரும் தன் சுய நலப் போக்கில்
    மாறும் மனத்தின் மாறாத குணத்தைச்
    சொல்லிப்போன விதம் மிக மிக அருமை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்தியமைக்கு நன்றி தோழர்.

      Delete
  3. உண்மையில் முரண்பட்டதாகத்தான் இருக்கிறது..

    ReplyDelete
  4. சில உண்மைகள்...

    அலை பாயும் மனம் என்னவெல்லாம் செய்கிறது...

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__