முகப்பு...

Wednesday 26 September 2012

அன்புச்சிதறல்கள்...


அன்பினால்
மெழுகாய் உருகிய மனமும்
அலட்சியத்தினால்
இரும்பாய் இறுக...
நெகிழச்செய்ய
சாகாவரமான
சத்தியநெருப்பின் ஒளியை
தேடுகிறது மனம்...!!
*****
புன்னகைப்பூவில்
மறைந்திருக்கும்
கண்ணீர் மொட்டுக்கள்
கண்களுக்குத் தெரியாது...!!!
*****
புல்நுனி பனியாய்
கண்மலர் பூத்த
கண்ணீர்த் துளிகளையும்
ரசிக்கும் கலைஞன் ...!!
*****

3 comments:

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__