முகப்பு...

Tuesday 11 October 2016

பூவுலக_பிரம்மாக்கள்...


கருவறையில் குடிபுகுந்த நாள்முதல்
தாய்க்குத் தோழியாகி.....
மகளாய்ப் பிறந்து..
தேவதையாய் விளங்கி...

தகப்பன் சோர்வுற்று இல்லம் - திரும்புகையில்
புன்னகைப்பூ வீசி வரவேற்று
புத்துணர்வூட்டி....

தன் மழலையில் அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தி மௌனிக்கச்செய்து....

தகப்பனுக்கு அன்னையாய்க் காட்சியளித்து..

தாய் நோயுற்றவேளையில்
மருத்துவச்சியாகி...
அவள் கண்ணீர் சிந்தும் நேரம்
கரம்நீட்டி கண்ணீர் துடைத்து நண்பனாகி....
அவள் அறியாமை நீக்கும் நேரம் ஆசானாக விளங்கி....

உடன்பிறந்தோனுக்கு இன்னொரு தாயாகி...

அவதாரங்கள் பல எடுத்து.
இல்லத்தில் என்றென்றும் மகிழ்ச்சியை வாரிவழங்கி...

பூவுலக பிரம்மாவாய்த் திகழ்ந்து
என்றென்றும் உயிர்ப்புடன் வைத்திருக்கும்
உன்னத படைப்பைக் கொண்டாட...

தனித்ததோர் நாளும் தேவையோ தரணியில்...??!!

என் வீட்டு தேவதைக்கும், என் தோழமைகள் வீட்டு தேவதைகளுக்கும், என் தேவதையின் நட்பு தேவதைகளுக்கும்
#பெண்குழந்தைகள்_தின_நல்வாழ்த்துகள்... :) <3