முகப்பு...

Monday 7 September 2015

தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்தும் போட்டிகள் - 2015


அன்புத்தோழமைகளுக்கு,
தமிழ்க்குடில் நிர்வாகியின் அன்பு வணக்கம்.
ஜூலை மாதம் உயர்திரு காமராசர் அவர்களின் பிறந்த தினம் மற்றும் தமிழ்க்கடல்திரு மறைமலை அடிகளாரின் 139வது பிறந்ததினத்தை (15 ஜூலை) முன்னிட்டும் தமிழ்க்குடில் அறக்கட்டளை சொற்பொழிவு மற்றும் கட்டுரை போட்டி அறிவித்திருந்தது. அதிகப்படியான போட்டியாளர்கள் பங்குகொள்ளும்பொழுதுதான் போட்டி சுவாரசியமடையும் என்பதாலும் பலரின் வேண்டுகோளை கருத்தில் கொண்டும் போட்டியின் கால அளவை இந்த மாதம் இறுதி வரை நீட்டித்திருக்கிறோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். தோழமைகளும் ப்ங்கு கொண்டு தங்கள் நட்பு வட்டத்திலும் பகிர வேண்டுகிறோம்.

தமிழ்க்கடல் திரு மறைமலை அடிகளாரின் 139வது பிறந்ததினத்தை (15 ஜூலை) முன்னிட்டு அவரின் தமிழ்த்தொண்டை நினைவுகூரும் வகையில் தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்தும் சொற்பொழிவு போட்டி.
போட்டி விவரங்கள்.
போட்டி எண் – 1
போட்டி - சொற்பொழிவு.
தலைப்பு - ”மறைமலை அடிகளாரும் அவரின் தமிழ்த்தொண்டும்”
விதிமுறை - மேலேகுறிப்பிட்ட தலைப்பில் சொற்பொழிவுக்கான கருத்து தயார் செய்து அவரவர் குரலில் சொற்பொழிவாக 10 நிமிட கால அளவு இருக்கும்படி பதிவு செய்து (MP3 Format) ஒலிவடிவில் தமிழ்க்குடில் அறக்கட்டளையின் மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்க வேண்டுகிறோம். ஒலிப்பதிவு செய்யும்பொழுது தங்களைப்பற்றிய எந்த விவரமும் கொடுக்காமல் சொற்பொழிவு மட்டும் பதிவு செய்து வழங்கவேண்டுகிறோம். தங்கள் பெயர், தொடர்பு எண், முகவரி மற்றும் புகைப்படம் இவற்றை ஒலிப்பதிவு அனுப்பும் மின்னஞ்சலில் இணைத்து அனுப்பிட வேண்டுகிறோம்.
போட்டி இறுதி நாள் : 30.09.2015
மின்னஞ்சல் முகவரி : tamilkkudil@gmail.com
பரிசு விவரம் : முதல் பரிசு தமிழ்க்குடில் அறக்கட்டளை வழங்கும் சிறப்புப்பரிசு மற்றும் சான்றிதழ், இரண்டு மற்றும் மூன்றாம் பரிசு நூல் மற்றும் சான்றிதழ்.
...........................
போட்டி எண் – 2

திரு காமராசர் அவர்களின் 112 வது பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்தும் இரண்டாம் ஆண்டு கட்டுரைப் போட்டி
போட்டி : கட்டுரைப்போட்டி
தலைப்பு :
1. தனிமனிதனாகக் காமராசர்
2. தேசியத்தலைவராகக் காமராசர்
3. நிர்வாகியாகக் காமராசர்
4. அரசியல்வாதியாக காமராசர்
விதிமுறை:
1. போட்டியில் கலந்துகொள்பவர்கள் உலகின் எந்த மூலையில் இருப்பவராகவும் இருக்கலாம்
2. குறைந்தது 4 பக்கம் முதல் 10 பக்கம் வரை இருக்கவேண்டும்.
3. படைப்புகள் வேறு எங்கும் பகிர்ந்ததாகவோ, அச்சிடப்பட்டதாகவோ இல்லாமல் தமிழ்க்குடிலின் போட்டிக்காக பிரத்யேகமா எழுதி அனுப்பவேண்டும்.
4. கட்டுரைகள் காப்பி பேஸ்ட்டாக இல்லாமல் தங்கள் வாழ்வில், உங்கள் பார்வையில் நீங்கள் திரு.காமராசரை உணர்ந்த விதத்தில் கட்டுரைகள் படைக்க வேண்டுகிறோம்.
இறுதி நாள் : 02.10.2015
படைப்பாளிகள் தங்கள் பெயர், தொடர்பு எண், முகவரியுடன் படைப்புகளை tamilkkudil@gmail.com என்ற மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படவேண்டும்.
படைப்புகளை லதா, பாமினி ஒருங்குறியில் தட்டச்சு செய்து வேர்டு ஆவணமாக அனுப்பவேண்டுகிறோம். தங்கள் படைப்புகள் எழுதியிருக்கும் பக்கத்தில் தங்கள் பெயர், முகவரி குறிப்பிடாமல் மின்னஞ்சலில் மட்டும் குறிப்பிட்டால் போதுமானது.

முடிவுகள் அறிவிக்கப்பட்டபிறகு பதிவுகள் தமிழ்க்குடில் குழுமத்திலும், வலைப்பூவிலும் பகிரப்படும்.
பரிசு விவரம்:
முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு, வெற்றி பெற்றவரின் பெயர் மற்றும் தமிழ்க்குடில் அறக்கட்டளையின் இலட்சை(லோகோ) பொறிக்கப்பட்ட பதக்கம் மற்றும் தமிழ்க்குடில் அறக்கட்டளை வழங்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
அதுமட்டுமின்றி போட்டிக்காக வரும் கட்டுரைகளில் சிறந்தபடைப்புகள் தேர்வு செய்யப்பட்டு நூலாகவும் அச்சிடப்படும் என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
இதை போட்டி என்று மட்டுமே எண்ணாமல், நமது தனித்திறமைகளை வெளிக்கொணரும் ஒரு முயற்சியாகவும்,
கொள்ள வேண்டுகிறோம்.
நம் தாய்மொழிக்கும், நம்முடைய அடுத்த தலைமுறைக்கும் நாம் ஆற்றும் கடமையில் ஒன்றென்பதை உணர்வோமாக. அனைவரும் ஆர்வமுடன் கலந்து கொள்வதோடு அல்லாமல் மற்றவர்களையும் எழுத ஊக்குவித்து இந்தப்போட்டியினை சிறப்பித்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அன்புடன் தமிழ்க்குடில் நிர்வாகம். :)