ஒவ்வொரு இரவும்
உனையடையும்
என் வெற்றுக்குறுந்தகவல்..
என் ஆசைகளையும், காயங்களையும்
கூறாவிடினும்..
உறங்கச்செல்லும் நான்
மீளா உறக்கம் தழுவிடின்
என் இறுதி மூச்சும்
உனையே நேசித்து சுவாசித்ததை
நான் இறந்தபின்(னே)னும்
நீயறியவே...!!
*****
நினைவென்னும்
கூறிய நகங்களால் கீறப்பட்டு
வெளிப்படும் கண்ணீர் முத்துக்கள்
அறிவிக்கும்...
ஆறிவிட்டதாக நினைக்கும்
காயங்கள் புரையோடிவிட்டதை...!
*****