ஆசமச்சான் ஆசமச்சான் கொஞ்சம்
என்னாசையுந்தான் கேளு மச்சான்..
என்னதிகாலை தொடங்கனும்
உம்முத்தத்தோட...
நா வாசக்கூட்டி கோலம் போட
நீ சாணத்தில பூவ வச்சி
அழகு கூட்டனும்....
அடுக்களையில் காஃபித்தண்ணி வெக்கயில
நீயும் அன்பாத்தான் அங்கங்கே
என கட்டிப்பிடிக்கனும்.....
குளிச்சி முடிச்சு சாமி கும்பிட
எஞ்சாமி நீயும் கூட நிக்கனும்...
பூப்போல இட்டிலியத்தான்
வெள்ள சிரிப்புக்கார வுனக்கு
புன்னகையோட நா ஊட்டனும்...
சோலிக்குப் போகயிலே
நீ சொக்கிப்போக
முத்தமொன்னு கொடுக்கனும்....
அப்பப்ப போன போட்டு
நீ ஆசவார்த்த பேச..
ஆறுமணிக்காவ நானுந்தவமிருக்கனும்..
கடிகாரமும் ஆறடிக்க..
வாசலிலே நா காத்துக்கிடக்கனும் ..
சோர்ந்து போன நீயும் முகங்கழுவி
எஞ்சேலையில முகம் துடைக்க..
சொர்க்கத்தத்தான் நா உணரனும்.....
மல்லிப்பூவ மச்சான் நீயும்
வச்சிவிடனும்...
எம்மடிமீது தலசாச்சு உலகக்கத நீ பேச
உம்முகம் பாத்து நா வியக்கனும்....
நீ நிலாச்சோறு ஊட்டும் விதம் கண்டு
மதியவளும் உம்மேல ஆசப்படனும்.....
அப்பப்போ சின்னதா சண்டையிடனும்..
ஆசவார்த்தை பேசி நீயும்
சமாதானஞ்செய்யனும்.....
நள்ளிரவு குளிரிலே நடுங்கும்
எனையிறுக்கி அணைக்கனும்..
சொல்லமுடியா ஆசயத்தான்
நீயும் சூதனமா புரிஞ்சுக்கனும்....
என்னாசையுந்தான் கேளு மச்சான்..
என்னதிகாலை தொடங்கனும்
உம்முத்தத்தோட...
நா வாசக்கூட்டி கோலம் போட
நீ சாணத்தில பூவ வச்சி
அழகு கூட்டனும்....
அடுக்களையில் காஃபித்தண்ணி வெக்கயில
நீயும் அன்பாத்தான் அங்கங்கே
என கட்டிப்பிடிக்கனும்.....
குளிச்சி முடிச்சு சாமி கும்பிட
எஞ்சாமி நீயும் கூட நிக்கனும்...
பூப்போல இட்டிலியத்தான்
வெள்ள சிரிப்புக்கார வுனக்கு
புன்னகையோட நா ஊட்டனும்...
சோலிக்குப் போகயிலே
நீ சொக்கிப்போக
முத்தமொன்னு கொடுக்கனும்....
அப்பப்ப போன போட்டு
நீ ஆசவார்த்த பேச..
ஆறுமணிக்காவ நானுந்தவமிருக்கனும்..
கடிகாரமும் ஆறடிக்க..
வாசலிலே நா காத்துக்கிடக்கனும் ..
சோர்ந்து போன நீயும் முகங்கழுவி
எஞ்சேலையில முகம் துடைக்க..
சொர்க்கத்தத்தான் நா உணரனும்.....
மல்லிப்பூவ மச்சான் நீயும்
வச்சிவிடனும்...
எம்மடிமீது தலசாச்சு உலகக்கத நீ பேச
உம்முகம் பாத்து நா வியக்கனும்....
நீ நிலாச்சோறு ஊட்டும் விதம் கண்டு
மதியவளும் உம்மேல ஆசப்படனும்.....
அப்பப்போ சின்னதா சண்டையிடனும்..
ஆசவார்த்தை பேசி நீயும்
சமாதானஞ்செய்யனும்.....
நள்ளிரவு குளிரிலே நடுங்கும்
எனையிறுக்கி அணைக்கனும்..
சொல்லமுடியா ஆசயத்தான்
நீயும் சூதனமா புரிஞ்சுக்கனும்....
வருசத்துக்கு ஒன்னுன்னு
புள்ளைகள பெத்து போடனும்..
அதுகள வருசத்தின் பெயரால கூப்பிடனும்
பூமித்தாயும் என
புள்ளைகள பெத்து போடனும்..
அதுகள வருசத்தின் பெயரால கூப்பிடனும்
பூமித்தாயும் என
பொறாமையா பாக்கனும்..
நம் புள்ளகளிடம்
நம் புள்ளகளிடம்
கலைமகளும் கல்வி கற்கனும்...
அதக்கண்ட பிரம்மனும் திகைக்கனும்....
புதியதோர் பிரபஞ்சத்த உருவாக்கனும்...
இறவா வரமுனக்கு கிடைக்கனும்
பிரபஞ்சமே உம்பெருமைய பேசனும்..
உன் அன்புமுகம் பாத்தபடி
உன்னணைப்பில நா உசிரவிடனும்..
ஆச மச்சான் ஆச மச்சான்
என் சின்ன சின்ன
ஆசயத்தான் கேளு மச்சான்...!!
அதக்கண்ட பிரம்மனும் திகைக்கனும்....
புதியதோர் பிரபஞ்சத்த உருவாக்கனும்...
இறவா வரமுனக்கு கிடைக்கனும்
பிரபஞ்சமே உம்பெருமைய பேசனும்..
உன் அன்புமுகம் பாத்தபடி
உன்னணைப்பில நா உசிரவிடனும்..
ஆச மச்சான் ஆச மச்சான்
என் சின்ன சின்ன
ஆசயத்தான் கேளு மச்சான்...!!