முகப்பு...

Wednesday 11 July 2012

மலரின் வினா...



வண்ணமலர்கள் வழியெல்லாம்
பூத்துக்குலுங்க..
காலைப்பொழுதின்
ரம்மியமான காட்சியிதனை
கண்டுகளிக்கத்தான் காலமில்லை..
அவசரமாய் அலுவலகப் பயணம்..
மயக்கும் மாலைப்பொழுதில்
நாணத்துடன் முகம் காட்டுகிறாள்
நிலாப்பெண்..
நின்று ரசிக்கவோ நேரமில்லை..
தொலைக்காட்சித் தொடர்
துவங்கும் நேரமிது..
தன்னை அழகுரச் செய்து
மண்ணுக்குள் புதைந்த வேருக்கு
நன்றி செலுத்த உதிரும் மலர்கள்
நம்மிடம் எழுப்பும் வினாவோயிது.....?

காலம் உனக்களித்த காலத்திற்கு
நீ செலுத்தும் நன்றிதான் என்ன...???




No comments:

Post a Comment

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__