முகப்பு...

Friday 21 April 2017

”எதுவும் நிரந்தரமில்லை..”

”எதுவும் நிரந்தரமில்லை..”

மரணத்திற்கு மரணமில்லையெனும்

யதார்த்தம் உணர்ந்தே...
ஆண்டாண்டு காலம் உடன் பயணித்தவர்
உலகம் துறக்கையில்...
மரணச்செய்தி கேட்டு மருண்டுவிடாது..,
கண்ணீர்விட்டுக் கதறியழுதிடாது.,
அடுத்தது என்ன என வினவியே
ஆகவேண்டியதைச் செய்திட 
அடுக்கடுக்காய் உத்தரவுகள் பிறப்பித்து..
அன்புக்குரியவரை “தீ”க்கு இரையாக்கி...
பிடி சாம்பலுக்காய் காத்து நிற்கும் வேளையில்..
உலக வாழ்வினின்று விடுதலையடைந்தவருக்காய்,
சிலநொடி கண்மூடி பிரார்த்திக்க...

வாழ்க்கைப்பாதையில் நிரந்தரமில்லா வாழ்வதனில்..
காலன்விளையாடும் பகடைக்காயில்..
மரணத்தை சந்திக்காத உயிர்களும் உண்டோ இவ்வுலகினில்...
நிதர்சனத்தை உணர்ந்து நிகழ்வினை 
சலனமின்றிக் கடப்போரை....

உற்றவரும், மற்றவரும் - இவள்(ன்)
கல்நெஞ்சக்காரி(ரனோ)யோ...
மனப்பிறழ்ச்சி கொண்டவளோ(னோ).. என
முதுகுக்குப்பின்னே முத்தாய்ப்பாய் பட்டம் சூட்டப்பட...
மயானம் என்றும் பாராமல்..
சிறுபுன்னகை எட்டிப்பார்க்க...

உறவில்லாதவரும் கண்ணீர் பெருக்கெடுக்கக் கதறியழுது..
மூக்கில் நீர் ஒழுக, மூச்சுத்திணறி....
விம்மி, வெதும்பிட..
ஏதோ ஓர் நேரத்தில் இறந்தவரை ஏசியோரும்..
அவர் வளர்ச்சியில் பொறாமைக் கொண்டோரும்..
இன்று அவர் புகழ்பாடிட..
கூட்டமெல்லாம் கூறுகிறது..
ஆகச்சிறந்த அன்பு அதுவென...!!

நிதர்சனத்திற்கும்... - எதுவும் நிரந்தரமில்லா 
நித்தமும் வாழும் வாழ்க்கைக்கும்தான்
எத்தனையெத்தனை வித்தியாசம்...?

நிதர்சனம் மறுத்து...
நிழலை விரும்பிடும் மனித மனம்..!!
மாண்டவரும் மீளப்போவதில்லை...
மாண்டவருடன் நாமும் - உடன் 
மரணித்துப் பயணிக்கப் போவதில்லை..!..

அறிந்தும்... தொடர்கிறதோ.....
நிதர்சனத்தை வெறுத்து..
நிழலை விரும்பிடும் விருப்பங்கள்..??!


...........நட்புடன் காயத்ரி வைத்தியநாதன்.. :)

Wednesday 22 March 2017

அறிந்தும்_அறியாமலும்...


#வாழ்க்கைப்பாதையில்... சிலபல_நேரங்களில்.. நம் இல்லாமையை உணராத இடத்திலும்கூட நம் இருத்தல் அவசியமாகலாம்... :)









































#வாழ்க்கைப்பயணத்தில்.. மனவலிமை படைத்தவரையும் #சிலபல_நேரங்களில் வலுவிழக்கச் செய்யும் சக்தி அன்பின்மீது பூசப்பட்ட அரிதாரத்திற்கு இருக்கலாம். :)

வாழ்க்கைப் பயணத்தில்.. #சிலபல_நேரங்களில்... பேசவேண்டியதை, பேசவேண்டியவரிடம் பேசவேண்டிய நேரத்தில், பேசாது ஒத்திப்போடுவதால் ஒருவேளை பேசமுடியாமலேயே போகநேரிடலாம்... 

Tuesday 21 March 2017

அகரம் எழுதத்துவங்கினேன் மீண்டும்....

ன்புத்தோழமைகளுக்கு, 


ன்பு வணக்கம்.  நீ......ண்ட நாட்களுக்குப் பிறகு உங்களையெல்லாம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. குழந்தை கோடு போடும்பொழுதே ரவிவர்மாவின் ஓவியமென தன் குழந்தையினைப் பாராட்டி ஊக்குவிக்கும் அன்னையைப்போல், என் கிறுக்கல்களை படித்து கருத்திட்டு, தவறுகளை அன்புடன் சுட்டிக்காட்டி திருத்திக்கொள்ள உதவி, வாழ்த்தி என்னை ஊக்குவித்து வரும் தங்களுக்கு மனமார்ந்த நன்றியும், அன்பும்.  சில மாதங்களாக பயணத்தில் இருந்ததால் எழுத இயலவில்லை.  கவிச்சிற்பிகளும், கவிப்பேரரசர்களும், கதாசிரியர்களும் வலம் வரும் இந்த வலைத்தளத்தில்,   கலைமகளின் காலடி வணங்கி, மீண்டும் அகரம் எழுதத்துவங்கியிருக்கிறேன்.  தங்களின் தொடர்ந்த வழிகாட்டலோடு...

என்றென்றும் நட்புடன்.,

காயத்ரி வைத்தியநாதன். :)


**********************************


#வாழ்க்கைப்பயணத்தில்
மகிழ்ச்சிப் பெட்டகத்தை
கண்ணெதிரே வைத்து - அதன்
திறவுகோலை
நம் அனுபவத்திடம்
ஒப்படைத்திருக்கலாம் இயற்கை. :)



#வாழ்க்கைப்பாதையில்...
உளப்பூர்வமாக உரையாடியர்கள், உதட்டளவிலான உரையாடலை கடைபிடிக்கையில் அவற்றை விழுங்கி ஜீரணிக்க #சிலபல_நேரங்களில்..
அதீத மனப்பக்குவம் தேவைப்படலாம். :)
#அறிந்தும்_அறியாமலும் ... 

#வாழ்க்கைப்பாதையில்... 
எதிர்பார்ப்புடனேயே பழகி 
எதிர்பார்ப்புக்கு ஏற்றாற்போல் இல்லையென்பதால் 
உதறித்தள்ளி செல்வோரை கொண்டாடி...
எதிர்பார்ப்பின்றி பழகுவோரை 
ஏளனமாகக் கருதுவதால்..
எதிர்பார்ப்புடனேயே பழகக் கற்கின்றனரோ..?? :) ;)
#அறிந்தும்_அறியாமலும் ...



*****************



Like
Comment