முகப்பு...

Thursday 26 February 2015

அவனதிகாரம்...

வார்த்தைகளை விதைத்து, நம்பிக்கை நீரூற்றி ஆயுளை அதிகரிக்கச் செய்து, மரணம் எனை அண்டவிடாது காக்கும் மருத்துவன்.
***
மரணித்த மனதையும் அன்பு மழை பொழிந்து புன்னகை மலர்களை மலரச்செய்யும் அற்புதன்.
***
மனதாளும் மன்னவனை மனதிற்குள் எண்ணும் நொடி, எதிரே தோன்றி தன் மரணமில்லாக் காதலை மனதிற்கு உணர்த்திச்செல்பவன்.
***
அவன் என் மௌனத்தையும், மொழிபெயர்க்கும் வித்தகன்.
***
அவன் என் எண்ணங்களுக்கு உயிர் கொடுக்கும் பிரம்மா.
***
அவனை நெஞ்சினில் சுமக்கும் என்னை நித்தமும் கர்ப்பிணியாய் உணரச்செய்பவன்.
***

Thursday 5 February 2015

அவனதிகாரம்...!!

‪#‎அவனதிகாரம்‬...
என் மனத்தோட்டத்தில்
அவனுக்காக விதைத்த
காதல் விதைகள்
விருட்சமாய் வளர்ந்திருக்க...
கனிகளைப் பரிமாறிடும்
வார்த்தைப் பாத்திரங்கள்
வறண்டு
வழியறியாத
என் தவிப்பை
விரும்பாதவனாய்..
மனத்தோட்டத்தில்
அவனுக்காய்
கனிந்திருக்கும்
காதல் கனிகளை
கண்கள் வழி சுகித்து
எனை
களிப்படைய செய்ய
என் மனதாளும் மன்னவன்
அவனுக்கே சாத்தியமாகிறது. smile emoticon

Monday 2 February 2015

இல்லாள்...


உனக்கான எண்ணங்களை 
எந்தன் ஓரப்பார்வையில் சுமந்து
ஒற்றைப்புன்னகையில் வெளிப்படுத்த...
என் மௌனத்தையேயறிந்த 
உனக்கு
புன்னகையை புரிந்துகொள்வதா கடினம்..??!

காதலின் அச்சாரமாய்
மலர்க்கூடையேந்தி மன்னவன்
உன் வரவுக்காய்
கதவருகே நானும் காத்திருக்க...

பளபளக்கும் பட்டுச்சேலையும்
அணிந்திருக்கும் வளையல்களும்
அகத்தாள்பவனின் அருகாமையை 
நோக்கியிருக்க..

மனதாளும் மன்னவனே..
பேதையெனை பரிதவிக்கவிடாது
விரைந்திடுவாய்...
இல்லாளின் இன்முகம் கண்டிடவே..!