முகப்பு...

Monday 2 February 2015

இல்லாள்...


உனக்கான எண்ணங்களை 
எந்தன் ஓரப்பார்வையில் சுமந்து
ஒற்றைப்புன்னகையில் வெளிப்படுத்த...
என் மௌனத்தையேயறிந்த 
உனக்கு
புன்னகையை புரிந்துகொள்வதா கடினம்..??!

காதலின் அச்சாரமாய்
மலர்க்கூடையேந்தி மன்னவன்
உன் வரவுக்காய்
கதவருகே நானும் காத்திருக்க...

பளபளக்கும் பட்டுச்சேலையும்
அணிந்திருக்கும் வளையல்களும்
அகத்தாள்பவனின் அருகாமையை 
நோக்கியிருக்க..

மனதாளும் மன்னவனே..
பேதையெனை பரிதவிக்கவிடாது
விரைந்திடுவாய்...
இல்லாளின் இன்முகம் கண்டிடவே..!  

9 comments:

  1. //என் மௌனத்தையே அறிந்த உனக்கு
    புன்னகையை புரிந்துகொள்வதா கடினம்!?..//

    நயமான வரிகள்.. இனிமை.. வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றியும்,மகிழ்ச்சியும். :)

      Delete
  2. எழுத்தில் உணர்வுகளின் படம் கண்டேன்.
    அருமை. மிக அருமை.
    நன்றி
    த ம 2

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சியும் நன்றியும். :) _/\_

      Delete
  3. அருமை. பாராட்டுகள்.

    ReplyDelete
  4. இன்றுதான் கண்டேன்! கவிதை நன்று!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா...தங்களின் வருகைக்கும், வாழ்த்திற்கும். __/\__

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__