முகப்பு...

Thursday 26 February 2015

அவனதிகாரம்...

வார்த்தைகளை விதைத்து, நம்பிக்கை நீரூற்றி ஆயுளை அதிகரிக்கச் செய்து, மரணம் எனை அண்டவிடாது காக்கும் மருத்துவன்.
***
மரணித்த மனதையும் அன்பு மழை பொழிந்து புன்னகை மலர்களை மலரச்செய்யும் அற்புதன்.
***
மனதாளும் மன்னவனை மனதிற்குள் எண்ணும் நொடி, எதிரே தோன்றி தன் மரணமில்லாக் காதலை மனதிற்கு உணர்த்திச்செல்பவன்.
***
அவன் என் மௌனத்தையும், மொழிபெயர்க்கும் வித்தகன்.
***
அவன் என் எண்ணங்களுக்கு உயிர் கொடுக்கும் பிரம்மா.
***
அவனை நெஞ்சினில் சுமக்கும் என்னை நித்தமும் கர்ப்பிணியாய் உணரச்செய்பவன்.
***

6 comments:

  1. வணக்கம்
    சகோதரி

    உண்மையான வரிகள் படித்தேன் அறிந்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.. மிக்க மகிழ்ச்சியும், நன்றியும்..

      Delete
  2. அருமை அக்கா...
    முகநூலில் வாசித்து இருக்கிறேன்.
    தமிழ்மணத்தில் வாக்கும் போட்டாச்சு.

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__