முகப்பு...

Thursday 9 May 2013

மனச்சிதறல்கள்...



பூக்கோலம் போட
வைக்கப்படும் புள்ளிகளில்
சிலநேரம்
நம்மையறியாமலேயே
உருவாகிறது
அழி(விழ்)க்கமுடியா சிக்குக்கோலம்..
****
தொண்டையில் சிக்கிய முள்ளாய் குத்தும்
என்
பகிரப்படாத  உணர்வுகள்
விடுதலை பெற விரும்ப
அகத்திலேயே சிறைவைக்கிறேன்
நீ 
அவதிக்குள்ளாவதை மனம் விரும்பாததால்..!!!
 ****

Wednesday 1 May 2013

முரண்பட்ட சிந்தனைகள்..


நிசங்களைக் கனவுகளாக்கிப் பார்க்க நினைக்கும் மனம்.!
கனவுகள் நிசங்களாகாதா என ஏங்கும் மனம்..!
****
நம்மிடம் இயல்பாய் இருந்த
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசா நட்பு,
சத்தியத்திற்கான மதிப்பு,
தூய்மையான அன்பு, மனிதநேயம்,
நம்பிக்கை அனைத்தும் இன்று
பேராசையாய்த் தோன்ற...

பேராசை எனக்கருதிய
செயற்கையான ஆடம்பர வாழ்வும்
வேண்டாதவையெனக் கூறப்பட்ட பொய்மையும், கபடமான அன்பு, இவையெல்லாம் இயல்பாய் யதார்த்தமாகிப் போக...
முரணானவற்றை செயலாக்குவதுதான் மனிதனோ...??
****
நாம் விரும்பியவர்  வெறுத்திடினும் விரும்பும்  மனம்..
வெறுப்பவர் நம்மை விரும்பிடினும் வெறுக்கும்  மனம்..
****