முகப்பு...

Monday 9 July 2012

சிலந்திக் கூடு...



மெல்லிய இழையெடுத்து
மேனிசுற்றி கூடமைத்து
பிரமிப்பூட்ட
அந்தரத்தில் அசாதாரணமாய்
அமர்ந்திருக்கும்
மெய்யுணரா சிலந்தியாய்..

பாசமெனும் நூலெடுத்து
பாங்காய் வலையமைத்து
பவ்வியமாய் அவளமர..

எவரும்
இடிக்கவியலா இரும்புக்கோட்டை
அவள் பாசக்கோட்டையென
இறுமாந்திருக்கும் வேளையிலே...

வழிபோக்கனவனும்
பாசவலை கலைக்க..
அறுந்த வலை கண்டு அழுவதா..!!!??

வழிப்போக்கன் 
வலையறுத்திடினும்
பாசமெனும் பந்தத்தில்
சிறையிருப்பது பாரமில்லை - என
உணர்ந்த - அவன் வரவு நோக்கி

வெட்டுண்ட வலைதனில்
ஒட்டி ஊச(ஞ்ச)லாடும் உள்ளத்தோடு
அவன் எண்ணங்களை எண்ணியபடியே
காலத்தோடு போட்டியிட்டுக்
காத்திருக்கிறாள்.......!!!

No comments:

Post a Comment

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__