முகப்பு...

Monday 19 December 2011

வரமா..?? சாபமா...?



ஓ விஞ்ஞானமே..!

அன்று,
ஓடித்திரிந்து ஆடிய நாங்கள்..

இன்று,
உட்கார்ந்த இடத்தில்
உலகத்தைக் கண்டு களிக்கும்
சோம்பேறிகளாய்.....

அன்று,
இயற்கையால் முதுமையிலும்.,
இளமையாய்..

இன்று,
செயற்கையால் இளைமையிலும்
முதுமையாய்...

அன்று,
நலம் அறிய
நாட்கள் பல காத்திருக்க..
இன்று..
நொடியில் நாடறிய வைத்தாய்...

அன்று,
ஒற்றை வார்த்தைக்கு
கால்கடுக்க காத்திருக்க..
இன்று,
முகம் பார்த்து நலம் அறிய வைத்தாய்...

இன்று,
அருகில் இருப்போரையும்
அந்நியர்களாய்
பார்க்க வைத்து.,

தூரத்தில் இருப்போரையும்.,
அருகில் கொணர்ந்தாய்.

அன்னையின் ஆசீர்வாதத்தையும்.,
அலைபேசியில் வாங்கவைத்தாய்..

உடன்பிறப்பின் திருமணத்தை
கானொளியில் காணவைத்தாய்..

ஒற்றை விசையில்
ஊருக்கே வாழ்த்து கூற வைத்தாய்..

ஆடம்பரத்திற்கு
அடிமையான நாங்கள்
அயல்நாட்டிற்கும் அடிமைகளாய்..!!??

அன்னைக்கு அண்டை வீட்டாரை
கொல்லி வைக்க வைத்தாய்...

மனிதனை,
தன் வசப்படுத்துவது
எப்படி என்றறிந்து.,

உன் அடிமையாக்கி,
ஆட்டுவிக்கும்...
திறன்படைத்த,

அறிவியல் தொழில் நுட்பமே!!
நீ
எங்களுக்கு வரமா...?? சாபமா....??
 

1 comment:

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__