முகப்பு...

Saturday 4 August 2012

விழலாகும் விழுதுகள்...



அறிஞனாய் விளங்கி.
ஆலமரமாய் தழைப்பானென்ற
பெற்றோருமங்கே கனவினிலே...

விதியின் விளையாட்டோ..
பெரும்பணக்காரனின் சூழ்ச்சியோ..
அரசியல்வாதியின் சதியோவிது...?
எவனோ பின்னிய வலையில்
போராட்டமே வாழ்வாகி...
இரையாகிப்போனானே இவனும்.....!!

கோடியில் வருமானம்..
வாழ்வதோ காட்டினிலே...

அந்நிய நாட்டின் சதியிலே
அஞ்ஞாத வாசமடைந்தானே இவனுமிங்கே...

நக்சலைட்டு, தீவிரவாதியென
பாரினையும் கலங்கவைக்கும்.
பட்டமும் பெற்றானே....!!

எவனோ உல்லாசமாயிருக்க
இவன் போராடுவதேனோ
எமனிடம்.....!!

அனாதைப்பிணமாய்
எங்கோ மரணிக்கவா
இப்பிறவி எடுத்தான்....??

இரயில் கவிழ்ப்பு,
பேருந்தில் குண்டு...
விமான கடத்தல்...
கட்டிடத் தகர்ப்பென
சதியில் சிக்கிய நின் சதியால்
விதிக்கு ஆளாகி..
விழலாகிய விழுதுகள்தான்
எத்துனை..?? எத்துனை..??

வாரிசிழந்து வாடும் வயோதிகர்கள்..
கணவனையிழந்து கதிகலங்கிடும் பெண்..
பால்மனம் மாறா பச்சிளங்குழந்தை.
தாயிழந்து தவிக்கும் குழந்தை
பணயக்கைதியாய் பரிதவிக்கும்
பள்ளிக்குழந்தைகள் என..
பலிவாங்கும் நீ
அகோர பசிகொண்ட அரக்கனோ..??

தாய்ப்பால் குடித்த உனக்கு
குருதி சுவைக்கும்
எண்ணமும் வந்ததேனோ....??

பந்தமிழந்த நீயும்
பாசத்தின் ஆழத்தை அறிவெதெப்படி.....??

விதியின் விளையாட்டோ..
வீணர்களின் சதியோ..
விழித்துக்கொள்வாய் வீரனே..!!

வறுமை, சூழ்ச்சி, அரசியல்..
விதியென
நின்சதிக்கு காரணம் கூறுபவனே..!!
நீயும் மனிதனாகக் காரணம்
தேடாததேனோ........??

விழலாகிப்போனதுமேனோ
நின் வாழ்க்கை ...??






8 comments:

  1. வறுமை, சூழ்ச்சி, அரசியல்..
    விதியென
    நின்சதிக்கு காரணம் கூறுபவனே..!!
    நீயும் மனிதனாகக் காரணம்
    தேடாததேனோ........??

    அருமையான வரிகள்! அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க தோழர்...தங்களது வாழ்த்துக்கு நன்றி..:)

      Delete
  2. இன்று என் தளத்தில் இப்படித்தான் சாவேன்! பாப்பாமலர்! http://thalirssb.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் பார்வையிடுகிறேன்..நல்ல பதிவுகள் பகிரப்படுகிறது அங்கே..சென்றுவந்தேன்..

      Delete
  3. ஒவ்வொரு வரியும் சாட்டையடி....

    /// வறுமை, சூழ்ச்சி, அரசியல்..
    விதியென
    நின்சதிக்கு காரணம் கூறுபவனே..!!
    நீயும் மனிதனாகக் காரணம்
    தேடாததேனோ........?? ///

    அருமை...
    பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ..மிக்க மகிழ்ச்சி..:)

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__