முகப்பு...

Friday 31 August 2012

அறுதிக்கடிதம்.....



மனம் திறவாமல்
மௌனித்தே
மனதில் குடியிருப்பவனே..!!

உன்வசப்பட்ட
நானும்..
நிரந்தர மௌனமேற்குமுன்..

நின் மனமும் திறப்பாயோ..?
மௌனமும் துறப்பாயோ..??

மௌனத்தில் இருப்போனே..
மனதிடம் வினவு..!!
நான்
உன் மனம் அடைந்தேனோ..??
உள்ளமும் கவர்ந்தேனோ..??

ஆன்மாவைத் தீண்டியவனே..
நின் ஆன்மாவைத் தொட்டேனா..??
விடையறிந்து...
ஆன்மாவைத் தூதனுப்பி
விடையளிப்பாய் நீயுமெனக்கு..

நின் மௌனத்திற்கெதிராய்
ஒலிக்கும் குரல்கள்..
எனை ஊமையாக்கி
நம்பிக்கையை
வெடிக்கச்செய்ய
எழும்பும் குரல்களா..??
என் விதியின் சதியா..??
விதிமாற்றும் சதியின் சதியா..??

வம்சம்தழைக்க
வாரிசு வழங்க விழையும்
வஞ்சியிவளை
நஞ்சுண்ண செய்வாயோ..??

நானணியும்
மௌன ஆபரணத்தை
நித்தமும் அணிவித்துப்பார்க்க
நிரந்தர ஆசையுங்கொண்டாயோ..??

நேசத்திற்குரியோனே...
நீண்டகடிதமனுப்ப
நெஞ்சம் விழைகிறது..
கண்ணீரோ கலைக்கிறது..

என் அறுதிக்கடிதம்
அனாதரவாய்...
குப்பையில் சேருமோ..??
நின் ஆன்மாவைச்சேருமோ
அள்ளி அணைப்பாயோ
அவனி துறக்கச்செய்வாயோ.....??

என்னவனே..
என் இறுதி மூச்சும்
நின்பெயர் கூறும்..
என்றும் நிறைந்திருப்பாய்
என்னவனாய்
பேதையின் நெஞ்சினிலே..

இறுதி ஆசையை
எடுத்துரைக்கிறேன்....
ஆன்மா விழித்திடின்
ஒருமுறையேனும்
உள்ளன்போடு அழைத்துப்பார்
என் பெயரை....
அவனியில் நானிருப்பின்
அயர்தியில் வந்தடைவேன் நின்னையே..!!!




7 comments:

  1. அட டா இவ்வளவும் பண்ணது யாரு..?
    அட கவிதைய விட படம் டெர்ரா இருக்கே......

    ReplyDelete
  2. காதலின் தவிப்பை எடுத்தியம்பிய அருமையான கவிதை. ரொம்பவே ரசிச்சேன் நான்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க தோழரே...தங்கள் கருத்திற்கு மகிழ்ச்சியும் நன்றியும்..

      Delete
  3. முடிவில் உருக வைக்கும் வரிகள்...

    (இன்ட்லி வேலை செய்யவில்லை... ஒட்டுப்பட்டை மற்றும் இன்ட்லி விட்கேட், உங்கள் தளத்தில் இருந்தால், இன்ட்லி திரட்டி சரியாகும் வரை நிறுத்தி (Edit html and Remove Indli Widget) வைக்கவும்... தளம் திறக்க பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகிறது...)

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ..நல்லது சகோ..செய்கிறேன் அப்படியே...

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__