முகப்பு...

Friday 31 August 2012

சிதறல்கள்..


அழகை கண்கள் எடைபோட
மனம் தோற்றுப்போகிறது...
மனம் எடைபோட
கண்களும் ஜெயிக்கிறது....:):):)
**********
எண்ணத்திலுள்ள உனை
வண்ண ஓவியமாய் தீட்ட.
ரவிவர்மனும் தோற்றான்..........!!
********** 
என் மனமறியா 
உன் அலைபேசியும் மௌனிக்க 
அலைபேசியிடம் கொண்ட கோபம் 
உன்மேல் திரும்பியதே 
உன் நிலையறியாமல்...:(:( 
********** 
நட்புக்கும்
கண்திருஷ்டி உள்ளதோ
கலிகாலத்தில்...??
**********
உன்னை 
ஒரு நொடியும்
மறக்க மறக்கும் என்னை
நினைப்பதற்கு நேரமில்லாமல் நீ....!!!
**********
அன்று
என் மௌனத்திற்கும்
அர்த்தம் புரிந்த நீ..
இன்று
என் வார்த்தைக்களுக்கு
விளக்கம் கேட்டு 
வினோதமாய் விளங்குவதேனோ...??!!
**********


8 comments:

  1. சிறப்பான பகிர்வு! நன்றி!

    இன்று என் தளத்தில் சுயநலமிக்க பூதம்! பாப்பாமலர்!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post.html

    ReplyDelete
  2. நல்ல வரிகள், சகோதரி. நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க தோழமையே..தங்கள் வாழ்த்து எம் எழுத்தை வளப்படுத்தட்டும்

      Delete
  3. "உன்னை
    ஒரு நொடியும்
    மறக்க மறக்கும் என்னை
    நினைப்பதற்கு நேரமில்லாமல் நீ....!!!" - Simply Super... Great.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் தொடர்ந்த ஊக்கத்திற்கு மகிழ்ச்சியும், நன்றியும் தோழமையே..:)

      Delete
  4. /// நட்புக்கும்
    கண்திருஷ்டி உள்ளதோ
    கலிகாலத்தில்...?? ///

    நம்புகிறவர்கள் இருக்கிறார்களே...

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__