முகப்பு...

Tuesday 28 August 2012

மழலை...!!!

நயவஞ்சகம்,
நம்பிக்கைதுரோகம்
பேராசை
சுயநலம்..
வன்முறை
அன்புணரா உள்ளத்திலிருந்து
ஒளிந்துகொள்ள
மழலையென்னும் போர்வையை 
மீண்டும் ஏற்கத்துடிக்கும் மனம்...
இயற்கையின் நியதியென
விரட்டியடிக்கும் இறை....!!
இயற்கையை
வெல்லவும் முடியாமல்
யதார்த்தத்தை
ஏற்கவும் முடியாமல்
உயிருக்குத்துடிக்கும் மீனாய்
மனம்...!!



2 comments:

  1. மனம் ஒரு கடிவாளமற்ற குதிரை என்று எழுதியிருக்கிறேன்... 'உயிருக்குத்துடிக்கும் மீனாய் மனம்'... நல்ல சிந்தனை உவமை.
    'மழலையென்னும் போர்வையை
    மீண்டும் ஏற்கத்துடிக்கும் மனம்...' -எல்லோருடைய மனத்திலும் இப்படி ஒரு எண்ணம் இருப்பது எதார்த்தம். Super

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__