முகப்பு...

Wednesday 8 August 2012

என்னவன்...!!


என்னவனே...!!
நீ
எனை
அம்மு என அழைத்து
உன்மீது அன்பொழுகச்செய்து...

செல்லம் என அழைத்து எனை
சினுங்கச்செய்து.....
தங்கம் என அழைத்து
எனை காதலில் துவளச்செய்து....
அடியே என அழைத்து
அணைக்கத்தூண்டி....

ஒவ்வொரு அழைப்பிலும்
ஓராயிரம் உணர்வுகளை
உணர்த்துபவன்….

மரியாதையில் விளிக்க
கோபத்தில் நீயிருப்பது
குரலில் ஒலிக்க….!!

சிவந்த
உன் கண்மலர்களில்
முத்தமிட்டு
கோபம் தணிக்க
எத்தனிக்கும் என் மனம்
உன்னருகில் இல்லாத எனை
எள்ளிநகைக்கிறதே
என்செய்வேன்.......??


4 comments:

  1. அட்டகாசமான காதல் வரிகள்!

    இன்று என் தளத்தில்!
    சென்ரியுவாய் திருக்குறள்
    எம்புள்ளைய படிக்கவைங்க!
    உடைகிறது தே.மு.தி.க
    http://thalirssb.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி தோழரே...தளத்திற்கு வருகிறேன்..

      Delete
  2. நல்லதொரு கவிதை...
    நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. @திண்டுக்கல் தனபாலன். தொடர்ந்த ஊக்கத்திற்கு நன்றி சகோ..

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__