முகப்பு...

Thursday 9 August 2012

அவள்....!!!


கருணையின் வடிவானவளை.
கவிதைவடிக்க
எண்ணினேன்...
கவிதைக்கே கவிதையா..??
கவிதையும் நகைக்க....

பிரம்மன் வழங்கிய பாறையில்
கலைமகள் செதுக்கிய
சிற்பமவள்....!!

எழுத்தில்
எண்ணத்தை திண்ணமாய்
எடுத்துரைப்பாள்..

முகத்தில் பொலிவு..
கண்களில் கருணை..
பேச்சில் வசீகரம்....

கலைமகளின் அருளினால்
கர்வம் துறந்த
அன்புப்பெட்டகம்..
மனிதத்திற்கே மனிதம்
கூறும் மனிதருள் மாணிக்கம்.....

இல்லையென்ற வார்த்தைக்கு
இல்லையென கூறும்..
இல்லத்துக்கு அரசி..
இனிமைக்கு சொந்தக்காரி...
இன்பத்தை வாரி வழங்கும்
அன்புத்தாய்....

வலியில்லா வாழ்க்கைக்கு
வழிகாட்டி - மருந்தாய்
மனிதம் வழங்கி
வளியாய் வலிதீர்க்கும்
வசீகரப்பெண்மணிக்கு....!!!



6 comments:

  1. அன்பு அன்னைக்கு அன்பான அழகிய கவிதை...

    பிடித்த வரிகள் : (கவிதைக்கே கவிதையா..??
    கவிதையும் நகைக்க....)


    தொடர வாழ்த்துக்கள்... நன்றி…

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ.தங்களது தொடர்ந்த வருகை ஊக்கமளிக்கிறது.எமது எழுத்துக்கள் மெருகேறட்டும்..

      Delete
  2. சிறப்பான வாழ்த்துப்பா! வாழ்த்துக்கள்!

    இன்று என் தளத்தில் சிறுவாபுரி முருகா சிறப்பெல்லாம் தருவாய்!
    http://thalirssb.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. வாங்க தோழரே...மகிழ்ச்சிங்க..:)

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__