முகப்பு...

Wednesday 1 August 2012

நம்பிக்கை....


காட்டாற்று வெள்ளமாய்
லட்சியங்கள் கொண்டவனை... 
காதலெனும் கலசத்தில்
அடைக்க முயலும் பேதை..!!


புத்தியுணர்ந்து..
மனம் மறுத்து...
புத்திக்கும், மனத்திற்குமான
போராட்டத்தில் தோற்றுப்போகிறேன்.......!!

தோற்பதும் மகிழ்ச்சிதான்..
வெற்றிக்கனி உன் வசமாவதால்....!!

*********************************************************

நம்பிக்கை....!!!


நானாகிய அவன்..
நாளை வருவான்
எனை ஆட்கொள்வானென
நம்பிக்கையிடம்
நம்பிக்கை வைத்து
நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்...!!




****************************************************************


சக்தி நீயும்
சக்திதனை கண்ணீரில் கரைப்பதேனோ.....?? 
அன்பின் ஆழம் அறியாதவர்கள்
கண்ணீரின் ஆழத்தை
அறிவதும் சாத்தியமா......??





****************************************************************

5 comments:

  1. உருக வைக்கும் வரிகள்.....

    நன்றி…

    ReplyDelete
  2. கடைசிக் கவிதை அருமை! சிறப்பான பதிவு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. மிக்க மகிழ்ச்சி தோழமையே..

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__