முகப்பு...

Sunday 25 March 2012

தொலைந்த என்னுள்ளம்...


உறங்கா உன் விழிகண்ட
நானும் உறக்கம் துறக்க..
என் அறிவுக்கண் திறக்க

உமிழ்நீர் வற்றிய உன் பேச்சு
கலைவாணியின் வீணையிசையாய்
காதில் ஒலிக்க...

மலரறியாமல் தேனெடுக்கும் தேன்சிட்டாய்
நானறியா நேரத்தே..
என் உளம்கவர்ந்து
மனதில் சிம்மாசனமமைத்த
உன் மனதில் நிரந்தரமாய்க்
குடியேற நிபந்தனையும் உளதோ.....!!???


No comments:

Post a Comment

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__