முகப்பு...

Friday 16 March 2012

மனதின் முரண்....!!!


இனங்காணா சோகமும் இதயத்தை ஆள
இனங்காணா  சோகம் எதுவென
இனங்காண மனம் விரும்ப
இனங்காணுவதெப்படி..??

இனங்காணாததை இனங்கண்டால்..
இனங்கண்டதை இனங்காணாமல் செய்ய...
இதயத்தையாளும் சோகமும்
இல்லாமல் போகுமே.....???

இதயத்தை இனங்காண...
கொம்புத்தேன் விரும்பும் 
முடவனாய் மனம்..??

இனங்கண்டதை..
இனங்காணாமலேயே இருந்திருக்கலாமோ...??

இனங்காணுமுன்
இனங்காணத்துடிக்கும் மனம்..
இனங்கண்டதும்
இனங்கண்டதேனோ...??
வினவும் மனம்...

மனதின் விருப்பத்தை இனங்காணுவதெப்படி...??
இனங்காணாததை இனங்காணுவதும்...
இனங்கண்டதை
இனங்காணாமல் செய்வதுமே வாழ்வாகிப் போகுமோ....???

No comments:

Post a Comment

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__