முகப்பு...

Saturday 3 March 2012

இச்சா மரணம்.......!!!


இன்று
இச்சா மரணம்
கிட்டாதோவென ஏங்குவோர் பலரிருக்க...

இச்சாமரண வரத்தைப் பெற்ற
கங்கை மைந்தனும்
சாபமாய் அனுபவித்தானே...!!

இச்சாமரணமும் கிட்டிவிட்டால்...
ஏக்கமும் இருக்குமோ இவ்வுலகில்..??


தற்கொலையும்தான் தவிர்க்கப்படுமே...!!

சிறு பொறி நெருப்பையும்
தாங்கா தேகத்தை
எண்ணெயிட்டு எரித்து...
உடலும் வெந்து..
உள்ளமும் துடிதுடிக்க...
வாழையிலையில் கிடத்தி...
வைத்தியம் பார்க்க...

கழுத்து நெரிபட்டு
நாக்கு தள்ளிவிழி பிதுங்கி..
விகாரமாய்க் காட்சியளித்து..

விடமறிந்தி தொண்டையெறிய..
வயிற்றைக் கிளறி...
வெகுளும்படி வாந்தியெடுத்து..,
வெளிறிபோகும் முகம்...!!

ஆற்றில் குதித்து
மூச்சு விட முடியாமல்...
மூழ்கிவிட...

கை எசமறுத்து...
உதிரமும் வெளியேறி..
உடம்பெல்லாம் வெளவெளக்க...

தண்டவாளத்தில் தலைவைக்க..
ஓடும் இரயிலின் சப்தம்
உச்சகட்ட பயத்தில் மனம்...
துணிந்து தலை கொடுத்து..
துண்டிக்கப்பட்ட தலை துடிதுடித்தபடி
யாருக்கோ எதையோ உணர்த்த முயற்சிக்க...

இறந்தபின்னும்
இல்லத்தாரை இங்குமங்குமாய்
இழுத்தடிக்கும் காவல்துறை...
உற்றார் உறவினர்களைக்
கொல்லாமல் கொல்லும்
கொடூர எண்ணமேனோ..??

தேர்வில் தோல்வி...
கைகூடா காதல்...
எட்டாக்கனியாய் கிட்டாத் திருமணம்..
திருமண முறிவு..
வரதட்சிணை.
பணியின்மை...
வியாபார நட்டம்....

தற்காலிக பிரச்சினைக்கு
தற்கொலைதான் தீர்வாகுமா...??

இடுக்கண் கலைவதாய் எண்ணி
நீயும்
இருப்போரை இம்சித்து..
இவ்வுலகம் துறக்கவும் வேண்டுமா..?
மரணத்திலும் கொடுமையா...??!!!

கொடூர மரணத்திற்கு துணியும் மனம்..
கொள்கைக்காக துணிய மறுப்பதேனோ...??
இறப்பதற்காக துணிந்த உள்ளம்
இன்பமாய் இருப்பதற்கும் துணியலாமே...??




2 comments:

  1. தற்கொலையைப்பற்றி பெரும்பாலும் கவிதைகள் எழுதப்படுவதில்லை... வெகு குறைவு... உங்களது கவிதையில் தற்கொலை செய்வோரின் வேதனையோடு... அவர்களது மரணத்துக்கு பின்னால் அவரின் உறவுகள் படும் வேதனையையும் சொல்லி இறுதியாய் தற்கொலை முடிவெடுக்க இருந்த தைரியம் ஏன் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு இருக்கக்கூடாது என்று முடித்திருப்பது மிகச்சிறப்பு... ஒரு நல்ல படைப்பை படித்த திருப்தி இந்தக்கவிதையில் எனக்கு கிடைத்தது...

    ReplyDelete
    Replies
    1. ஆழ்ந்து படித்து எமது கிறுக்கல்களுக்கு பின்னூட்டம் இட்டு எமது எழுத்தை செம்மை படுத்தும் தங்களுக்கு மகிழ்ச்சியும் நன்றியும் தோழமையே..:)

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__