முகப்பு...

Friday 30 March 2012

ஆசான்...!!




கைபிடித்து நடக்கவைக்கும்
அன்னையாய்
அகரம் கற்பித்தாய்..!!

என்னுள் எண்ணத்தை விதைத்து
எழுதத் தூண்டியாய்...!!




எழுந்து நடக்கத் துவங்கியவளின் 
எழுத்தை
எட்ட நின்று இரசித்து..
நான் கரம் கற்பதற்குள்
உலகம் கற்றவளாய் கைவிடுத்து
தூரத்தில் காட்சியளிக்கிறாய்..!!

கைபிடித்து கற்பித்தவன்
காலமெல்லாம் கற்றுக்கொடுக்க
காத்திருக்கிறேன் நானுமே...!!

இறுதி எழுத்துவரை
இறையாய் உடனிருந்து
எண்ணத்தை எழுத்தாய் வடிக்க
என்றும்..
உரமாய் உடனிருப்பாய் நீயுமே...!!!

No comments:

Post a Comment

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__