முகப்பு...

Wednesday 12 September 2012

முரண்பட்ட சிந்தனைகள்...


விலங்குகளிடத்தும் மனிதநேயத்தோடு நடந்துகொள்ளும் மனிதர்கள்..
மனிதனிடத்தும் விலங்குகளைப்போல் நடந்துகொள்ளும் மனிதர்கள்...

ஏன் இந்த முரண்..??

***************
நெருங்கியிருந்தும் மனதளவில் விலகி சிலர்..
விலகியிருந்தும் மனதளவில் நெருங்கி சிலர்..

***********
இறக்கைகள் படபடக்க,கொஞ்சு மொழியில் காதல் பேசி சுதந்திரமாய் பறந்து செல்லும் பறவைகளை ரசிக்காமல்,அதை சிறையில் அடைத்து கதறலை ரசிக்கும் நமது முரணான ரசனை. 

***********

சத்தியம் என கூறப்படும் வார்த்தையில் சத்தியம் இல்லை. சத்தியத்தை வாழ்வினில் கடைபிடிக்காமல், சத்தியத்தை வார்த்தையில் மட்டும் கடைபிடித்து அடுத்தவர் வாழ்வினில் கடைபிடிக்கவேண்டும் என எண்ணும் நம்முடைய முரண்பட்ட சிந்தனை.

சிந்தனைகள் தொடரும்....

***********


6 comments:

  1. மனிதனின் வக்கிரம் தொலைக்க பட்டால் மட்டுமே சாத்தியம் தோழி அதுவரை சிந்தனைகள் தொடரட்டும் .........அருமை தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. தோழியின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..:)

      Delete
  2. நல்ல சிந்தனைகள்... தொடருங்கள் தோழி... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. முரண்பட்ட சிந்தனைகள் சிந்திக்க வைத்தன! நன்றி!

    இன்று என் தளத்தில்
    ஓல்டு ஜோக்ஸ் 2
    http://thalirssb.blogspot.in/2012/09/2.html


    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__