முகப்பு...

Monday 2 December 2013

என் சுவாசமாய்....!

என் 
சுவாசத்தில் நிறைந்தவனே..
ஒவ்வொரு நொடியும்
உனையே
(சு)வாசிக்கிறேன்...
யாசிக்கிறேன்
உனை 
வாசிக்கத் தவறிய
நொடியினையே...!
யாசித்ததை 
வாசிக்க
சுவாசிக்கிறேன்..
உனை வாசிப்பதற்கான
என் யாசிப்பும், சுவாசிப்பும்
தொடர்கிறது
நீளும் நம் காதல் பயணத்தில்..!!

14 comments:

  1. யாசிப்பும் சுவாசிப்பும் தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வணக்கம்

    காதல் நினைவு சுமந்த கவிதை அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. வாசித்து ரசித்திட அருமையான காதல் வரிகள் அடங்கிய கவிதை.
    என்போன்ற ரசிகர்கள் என்றென்றும் வாசித்து மகிழ்ந்திட
    தொடரட்டும் காதலுடன்கூடிய கவிதைப்பயணமும்.

    கண்ணனின் புல்லாங்குழல் இசையில் மயங்கி
    ராதை கவிதை எழுதுவதை மறந்திடவேண்டாம்..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஆனந்த்..தங்கள் அனைவரது ஊக்கத்தினால் தொடரும் எம் எழுத்துகள்..:)

      Delete
  4. (சு)வாசிக்கிறேன்...

    இந்த வரி போதும் காதலின் ஆழத்திற்கு

    ReplyDelete

  5. வணக்கம்!

    தமிழ்மணம் 3

    நீளும் கவிதைப் பயணத்தில் நெஞ்சுருகி
    நாளும் பெறுவாய் நலம்!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி...தங்களின் வாழ்த்து எமது எழுத்துகள் செம்மையுற வழிவகுக்கட்டும்..:)

      Delete
  6. வாசமாய் சுவாசமாய் இருந்து
    சுகவாசமாய் மாறிய காதல்!

    அருமையான கற்பனை!
    காட்சியும் கவிதையும் ரசிக்கவைக்கின்றன!

    வாழ்த்துக்கள்!

    த ம.4

    ReplyDelete
  7. வாசிப்பும், யாசிப்பும் சுவாசிப்புடன் கலந்த விதம் அருமை

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றியும், மகிழ்ச்சியும் சுமன்..:)

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__