முகப்பு...

Monday 16 December 2013

எண்ணச்சிதறல்...


பொம்மையடுக்கி
விளையாடும் குழந்தைபோல்
எண்ணத்தை எழுத்தாய்
அடுக்குகிறேன்...!

குழந்தைகட்டிய வீட்டை
குதூகலத்துடன் கண்டு இரசிக்கும்
பெற்றோராய்...
எழுத்தால் நானெழுப்பிய இல்லத்திற்கு
கவிதையெனப் பெயர்சூட்டி
அன்பால் அள்ளியெடுத்து
மகி(ழும்)ழ்விக்கும் நட்புகள்...!!
*******************
தீர்ப்பு...!!!
எழுதப்பட்ட தீர்ப்பிற்கு 
வாதிடும் வழக்கறிஞர்களாய் 
பணமே வாழ்வென
தீர்ப்பெழுதி;
வாதிட்டு;
தண்டனையேற்கும்(வாழும்)
மானுடம்...!!



8 comments:

  1. வணக்கம்

    கவிதையில் சொன்னது உண்மைதான் அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. வணக்கம்
    த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. //எழுத்தால் நானெழுப்பிய இல்லத்திற்கு
    கவிதையெனப் பெயர்சூட்டி அன்பால் அள்ளியெடுத்து//

    அழகான இல்லம் ! ;)

    //பணமே வாழ்வென தீர்ப்பெழுதி;//

    திருப்தி தராத தீர்ப்பு ! ;(

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்...மிக்க நன்றி ஐயா..தொடர்ந்த ஊக்கத்திற்கு..:)

      Delete
  4. இரண்டும் அ௫மை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ..மிக்க நன்றி ..தொடர்ந்த ஊக்கத்திற்கு..:)

      Delete
  5. அருமை... நட்பு என்றும் தொடரும்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__