முகப்பு...

Tuesday 22 October 2013

இதய மொழி..!


இசையாய்
என்னுள் கலந்து
இதய சிம்மாசனத்தில்
இடம்பெற்று..
ஐயிரண்டு விரல்களால்
ஆரத்தழுவி
மௌனமொழியில்
என் இதயம் மீட்டும்
இசைக்கு
கண்களால்
நீ வடிக்கும் கவிதை
தென்றலாய் என் மனதை வருட..
மேகம் கண்ட மயிலாய்
மனம் களிப்படைந்து
காதல் மழையில் நனைகிறேன்
ஒவ்வொரு நொடியும்....!!!

10 comments:

  1. அப்பாடா... இன்றாவது நல்லதொரு உற்சாகமூட்டும் கவிதை கிடைத்தது... நன்றிங்க...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. மௌன மொழியில் என் இதயம் மீட்டும் இசைக்கு
    கண்களால் நீ வடிக்கும் கவிதை!..

    ஆயிரம் அர்த்தங்களுடன் கூடிய வரிகள்!.. அருமை!..

    ReplyDelete
  3. கார்முகில் கண்ட களிப்பில் காதல் மழையில் நனைந்துகொண்டிருக்கும் மயில் எங்களை அருமையான கவிதை மழையில் நனையவைத்துவிட்டது.

    ReplyDelete
  4. //மௌனமொழியில் என் இதயம் மீட்டும் இசைக்கு கண்களால்
    நீ வடிக்கும் கவிதை தென்றலாய் என் மனதை வருட.. மேகம் கண்ட மயிலாய் மனம் களிப்படைந்து//

    மிகவும் ரம்யமான கோர்வையான வரிகள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. இதயம் பேசிய மொழிகேட்டு
    இயங்க மறுத்ததே என்னிதயம்...

    அருமை! உங்கள் மொழி!

    வாழ்த்துக்கள் தோழி!

    த ம.3

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி தோழி....குறள் வெண்பாவில் அனைவரையும் மகிழ்ச்சியூட்டும் எமது தோழியின் வாழ்த்திற்கு நன்றி...:)

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__