முகப்பு...

Monday 21 October 2013

மரண ஒத்திகை


வாழ்க்கை நாடகத்தில்
மரண கதாபாத்திரத்தை
கச்சிதமாய் நடித்துமுடிக்க
ஒத்திகை பார்க்கப்படுகிறது
மருத்துவமனையில்..!

தேர்ச்சியடைந்தவர்
இடுகாடு செல்ல...
தேராதவர்கள் 
இல்லம் திரும்புகின்றனர்
ஒத்திகையைத் தொடரவே...!!

14 comments:

  1. அனைவருக்கும் ஒருநாள் உண்டு...

    ReplyDelete
  2. மிகச் சரியாகச் சொன்னீர்கள்
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி தங்களுடைய வாழ்த்து வளமாக்கட்டும்.._/\_

      Delete
  3. சபாஷ்! முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் ஒத்திகை மிக அழகாக கற்பனை செய்யப்பட்டுள்ளது.

    பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  4. வணக்கம்
    கவிதையின் வரிகள் அருமை ரசித்தேன் வாழ்த்துக்கள்
    --நன்றி-
    --அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. நல்ல கவிதை...
    அக்கா இங்கும் அதையேதான் சொல்கிறேன்... தொடர்ந்து இதேவகை கவிதைகள் எழுத வேண்டாம். நல்ல சந்தோஷமாக இரு கவிதை எழுதுங்கள்... அது விசு சாயலில் கூட இருக்கட்டும்...

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹ...தம்பி அதுக்கென்ன எழுதிடுவோம்...:)

      Delete
  6. எத்துனை இயல்பாய் இலகுவாய்
    மரணமதை எடுத்தியம்பிவிட்டீர்கள்!...

    மிக மிக அருமையான சிந்தனை!
    சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள் தோழி!

    த ம.3

    ReplyDelete
    Replies
    1. வாங்க தோழி....மிக்க மகிழ்ச்சியும், நன்றியும். :)

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__