முகப்பு...

Saturday 7 July 2012

மரணத்தின் பிடியில்...


காலனவன்
என் காலத்தின் காலம் குறிக்க..
மனக்குதிரையின் வேகமதுவோ..
பாசக்கயிற்றை வென்றிடத் துடிக்க..

இடுகாட்டுச் சிவனை தரிசிக்காமல்
இருப்பதும் சாத்தியமோ
இப்பாரினில்...??

ஆடை, ஆபரணங்கள் அணிந்து
ஆசையுடன் அழகுபார்த்து
எண்ணத்திலிருப்போருடன்
ஏகாந்தமாய் இருக்கத்தூண்டும் மனம்..
காயமும், மருந்தும் மாறி மாறி வழங்கிய
காதலை நினைவு கூற...

சுமந்தவளை
சுமக்கத் துடிக்கும் மனம்....
சுமந்தவளுக்கு
சுமைக்கூட்டிப் போகும் மனம்...

குழந்தையாய்
குழந்தையின் குழந்தையோடு குதூகலிக்க
விரும்பும் மனம்..

நிந்தித்தவரையும் நேசித்து
நேசித்தவரை யாசிக்கும்..

எண்ணங்களை எழுத்தாக்கி
குருமிஞ்சிய சீடனாய்
கோடிக் கவிதைகள்
குருக் காலடி சமர்பிக்க
விரும்பும் மனம்..

அனைவரிடத்தும்
ஆசிவாங்கத் துடிக்கும் மனம்...
செய்யாத பாவத்திற்கும்
மன்னிப்பு கோரும் மனம்..

உறவினை நாடும் மனம்
உள்ளன்புடையோரிடம்
உரையாட விரும்பும் மனம்

சொந்தம் சூழ
மனதாள்பன் மடியில் உயிர் துறக்க
விரும்பும் மனம்..
மரணத்தை வெல்ல விரும்பும் மனம்
ஆசைகள் ஆயிரம் இருப்பினும்
அகிலத்தை துறக்காதோரும் உளரோ..??

https://mail.google.com/mail/images/cleardot.gif

2 comments:

  1. வாவ் அருமை அக்கா....
    அருமை... அருமை...
    கவிதை கலக்கல்.

    ReplyDelete
  2. @சே.குமார்...மிகவும் நன்றி தம்பி..

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__