முகப்பு...

Monday 8 July 2013

பிரமிக்கவைக்கும் இயற்கை

மரத்திற்கு மரம் தாவிக்குதித்து ஒருநொடி விழுந்துவிடுமோ என நமையெல்லாம் அச்சத்தில் ஆழ்த்தி தன்னுடைய பலவகைக் குறும்புத்தனங்களினால் நமையெல்லாம் மகிழ்விக்கும் குரங்குகள்.. :)
---
ஆகாய காகிதத்தில் 
இயற்கையெழுதிய அழகிய ஓவியத்தில் 
வகைவகையான வண்ணத்தினால்
அழகாய் மிளிர்ந்து 
நமையெல்லாம் வியப்பில் ஆழ்த்தும் 
வானவில்..
---
வறுமையில் - நிறைவையும்
சோர்வில் - சுறுசுறுப்பையும்
சோகத்தில் - மகிழ்ச்சியையும் 
மனிதனுக்கு அளிக்கும் மகத்தான மருந்தாய்
இயற்கை மனிதனுக்கு வழங்கியிருக்கும் 
குழந்தையின் சிரிப்பு...
---
ரசனையற்றவர்களைக்கூட 
ஏதாவது ஒருநொடியில் 
தன்வசம் ஈர்த்துத் தன் அழகால் மகிழ்வித்து 
தன் மணத்தால் மனதை குளிர்வித்து 
முகத்தில் புன்னகையைத் தாங்கச்செய்யும் மலர்கள்...
---

12 comments:

  1. ஆஹா! நம் மூதாதையர்களுக்கு ஒரு கவிதையா பலே! பலே!

    ReplyDelete
  2. என்றும் ரசிக்க வைக்கும் இயற்கையை வரிகளில் கண்டு ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. வார்த்தைகள் எம்முள்
    காட்சியை விரித்துவைத்து
    மனத்தைக் குளிர்வித்தன
    மனம் கவர்ந்த படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. அருமை அக்கா.
    ரசித்தேன்.

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__