முகப்பு...

Thursday 25 July 2013

தமிழ்க்குடில் அறக்கட்டளை - நூலகம்

அன்புத் தோழமைகளுக்கு  பணிவான வணக்கம்.


நமது தமிழ்க்குடில் அறக்கட்டளையின் தற்போதைய செயல்பாடாக, அறக்கட்டளையின் தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் அரியலூர் மாவட்டம், சிலம்பூர் கிராமத்தில் இணைய வசதியுடன் கூடிய முன்மாதிரியான ஒரு நூலகம் கட்டப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே.

உங்கள் அனைவரது பேராதரவோடும், ஒத்துழைப்போடும் கட்டிடப் பணி இனிதே நிறைவு பெற்றது என்பதை மிகவும் மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம். தங்களின் பார்வைக்காக நூலகத்தின் முகப்பு தோற்றம் மற்றும் சில புகைப்படங்களை இங்கேப் பகிர்ந்திருக்கிறோம்.

மேலும் சில தினங்களில் நமது நூலகத்தின் திறப்பு விழா நடைபெறவிருப்பதால் திறப்புவிழா பற்றிய விவரங்கள் விரைவில் தங்கள் அனைவரோடும் பகிர்ந்துகொள்ளப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

நூலகப் பணிக்காக தமிழ்க்குடில் அறக்கட்டளைக்கு நிதியாகவும், நூல்களாகவும், அச்சு எந்திரம் மற்றும் நூலகத்திற்குத் தேவையான பொருட்களாகவும் கொடுத்து உதவிய அனைத்து அன்புள்ளங்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

நூலகத்திற்காக நூல்கள், நிதிகள் சேகரிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருவதால் பங்களிப்பு வழங்க விருப்பம் உடைய அன்பர்கள் விவரங்களுக்கு நிர்வாகிகளைத் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.

என்றென்றும் அன்புடன்
தமிழ்க்குடில் நிர்வாகம். _/\_

நிர்வாகிகள்:-
தமிழ்க்காதலன் :https://www.facebook.com/thamizhkkaathalan
அனிதாராஜ் : https://www.facebook.com/AnithaRaj.2701
காயத்ரி வைத்தியநாதன் : https://www.facebook.com/kayathrivaithyanathan

6 comments:

  1. மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு நன்றி சகோ..:)

      Delete
  2. அக்கா உங்கள் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துகள்... நானும் எனது பக்கத்திலும் பகிர்கிறேன்....

    ReplyDelete
  3. வலைச்சர ஆசிரியைக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ..மிக்க மகிழ்ச்சி..தங்களின் தொடர்ந்த ஊக்கத்திற்கு நன்றிகள்.._/\_

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__