முகப்பு...

Wednesday 27 November 2013

இரங்கல் பா...!!!

மரணத்திலும் நின்மடி
தழுவிச்செல்ல ஆசை...
நீயோ..
என் மரணச்செய்தியை
யாரோ சொல்லக்கேட்டு
எனக்காக எங்கோ நடக்கும்
இரங்கல் கூட்ட
மௌன அஞ்சலியில்
எனை நினைவுகூர்ந்து...
எனக்காக
”யாருமறியாமல்” மனதினுள்
நீயெழுதும் இரங்கல்பாவை
நானே மொழிபெயர்த்துக்கொள்ள
விருப்பம்தெரிவிக்கிறாய்
மௌனமாய்...!!
நீ
எனக்காக எழுதுவது
”இரங்கல்”பா வானாலும்
”காதல்” பா வானாலும் ..
நீ
செலவிடும் அந்த ஒரு நிமிடமும்..
சிந்தும் ஒற்றைத்துளி
கண்ணீரும் கூட போதுமானது
என் ஆன்மா அமைதிகொள்ள...!!




4 comments:

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__