முகப்பு...

Tuesday 19 November 2013

வார்த்தை...

பேசிய வார்த்தைகளும்,
பேசத்தவறின நொடிகளும்
உடலைப்பிரிந்த உயிரென
திரும்ப வாராததுபோல்
நாம் பேச மற(றுத்)ந்த மனிதர்களும்
கிடைக்காமலே போகலாம் ..:) 

******
கோபத்தில் விதைக்கப்படும் 
வார்த்தை விதைகள் 
வெறுப்பை அறுவடை செய்ய...
மௌனத்தில் 
புதைக்கப்படும் வார்த்தைகள்  
மனதை ரணமாக்க..
மனத்தோட்டத்தில்
கோபத்திற்கும், மௌனத்திற்குமிடையேயான
வார்த்தைகளை
விதைத்து வாசம் வீசும்
மலர்களை பயிரிட
மறு(றந்)த்த நிலையில்
இருப்பது ஏனோ.....!??

8 comments:

  1. //நாம் பேச மற(றுத்)ந்த மனிதர்களும் கிடைக்காமலே போகலாம் ..:) //

    மிகவும் உண்மை தான்.

    வார்த்தைகளை விதைத்து வாசம் வீசும் மலர்களை பயிரிட
    தாமதமே செய்யக்கூடாது.

    ReplyDelete
  2. வணக்கம்
    உண்மையான வரிகள் உணர்வு மிக்கவை அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__