முகப்பு...

Monday 18 November 2013

முற்றுபெறாத கவிதை...!!



உன்
தேகப்புத்தகத்தில்..
இதழைத் தூரிகையாக்கி
எண்ணங்களின் வண்ணத்தில்
எழுதுகிறேன்
காதல் கவிதை..!!

என்னவனே...!
மையலில்
உனையே மையமாக்கி
நானெழுதும் கவிதையின்
நாயகனும் நீயே..
வாசகனும் நீயே..
என் இரசிகனும் நீயே..

நான்
எழுதிக்கொண்டேயிருக்க
நீ
ரசித்துக்கொண்டேயிருக்க
யாதுமானவனே
உனைப்பற்றிய
கவிதை
முடிவுறாமலே
தொடர்கிறது என்மனதினிலே..!!!

11 comments:

  1. ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. மிக்க நன்றி சகோ..தங்கள் தொடர்ந்த ஊக்கம் எமது எழுத்துக்களை மெருகேற்றட்டும்..:)

    ReplyDelete
  3. முற்றுபெறாத கவிதை...!!

    இதுபோன்ற காதல் கவிதைகள் என்றும் முற்றுப்பெறாமல்; இருப்பதே நல்லது ! ;)

    ReplyDelete
  4. முற்றுபெறாத கவிதை...!!

    இதுபோன்ற காதல் கவிதைகள் என்றும் முற்றுப்பெறாமல்; இருப்பதே நல்லது ! ;)

    ReplyDelete
  5. முற்றுப் பெறாத கவிதை முத்தாக இருக்கிறது.

    ReplyDelete
  6. Replies
    1. வாங்க...வருகைக்கும், கருத்திற்கும் நன்றியும், மகிழ்ச்சியும். :)

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__