முகப்பு...

Sunday 10 November 2013

சமூகம்...!!!

ஒருவேளை போதைக்காக
உடைக்கப்பட்ட 
பாதாள சாக்கடையின் இரும்பு மூடியும்,
மேம்பாலத்தின் கைப்பிடிச்சுவற்றிலிருந்து 
வெட்டப்பட்ட இரும்பும்
விளக்குகிறது 
சமுதாயத்தின் மீதான அக்கறையை..!!
*****
விபத்துக்குள்ளானவர்களிடம்
களவாடப்பட்ட பொருட்களும்..
அவசர சிகிச்சையில் சேர்ப்பதற்கு
இங்குமங்கும் 
அலைக்கழிக்கப்படுவதிலும்
சவத்தை எடுத்து செல்ல காசுகேட்டு
அடாவடி செய்யும் பிணவறை ஊழியரிடமும்
வெளிப்படுகிறது மனிதாபிமானம்..
*****
பசிக்கொடுமையில்
எச்சிலையானாலும்
எடுத்துண்ண தயங்காதவனை
வட்டமேசை மாநாட்டில்
சீண்டப்படாதிருக்கும் உணவுகள் 
எள்ளி நகைத்தபடி விளக்குகிறது 
கருணையுள்ளத்தை..!!
*****


14 comments:

  1. நல்ல கவிதை.
    என் தமிழ்மணம் வோட்டு +1
    தொடர்ந்து எழுதுங்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க தோழர்..தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி. :)

      Delete
  2. கவிதைகள் மிக..மிக் அருமை

    ReplyDelete
    Replies
    1. வாங்க தோழர்..தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி. :)

      Delete
  3. இப்படியான சமூகத்தில் தான் நாமும்....

    ReplyDelete
  4. சமுதாயத்தின் மீதான அக்கறை,
    மனிதாபிமானம் மற்றும்
    கருணையுள்ளம் ..... ஆகியவை

    சாட்டையடி வாங்கியுள்ளன உங்கள் பார்வையில்.

    பகிர்வுக்குப்பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களுடைய வாழ்த்திற்கு நன்றியும், மகிழ்ச்சியும் ஐயா.._/\_

      Delete
  5. அருமையான படைப்பு! ஒவ்வொரு வார்த்தைகளும் பளீர் என அறைகிறது! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழர்,...தங்கள் அனைவரின் வாழ்த்தும் எமது எழுத்துக்கள் சிறக்க செய்யட்டும்..

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__