முகப்பு...

Friday 22 November 2013

இலக்கை நோக்கி..! * 250ஆவது பதிவு...! -

அன்பு வலைப்பூ தோழமைகளுக்கும், ​அவ்வப்பொழுது எம் சந்தேகங்களை தீர்த்துவைத்து ஆசானாய் ​உடன் பயணித்து வரும் நட்புகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.   சிறு, சிறு கோடுகளாய் நான் வரைந்த ஒவ்வொரு கிறுக்கலையும், ​ஓவியமென ரசித்து, எம்மைத் தொடர்ந்து உற்சாகப் படுத்திவரும் அன்புத் தோழமைகள் அனைவரும், எமது குறைகளை சுட்டிக்காட்டி எம் எழுத்துக்களை செம்மையாக்க உதவும்படி வேண்டுகிறேன். ​தங்களது தொடர்ந்த ஊக்கமும், வாழ்த்துகளும் வழங்கி எமது தூரிகைத்தோட்டத்தில் தொடர்ந்து மணம் வீசும் அனைத்து நட்பு மலர்களுக்கும் மனமார்ந்த நன்றி.._/\_ 
**********
எண்ணப் பேருந்தில் 
பயணிக்கும் அறிவு
சந்திக்கும் நிறுத்தங்கள்தான்
எத்தனையெத்தனை...??!!

ஆசை, பேராசை, கோபம்,
நகைச்சுவை, அழுகை,
காதல், காமம், உறவு, பாசம், 
நட்பு, பகை, நன்றி,  பழிவாங்கல், 
துரோகம், நம்பிக்கை, நம்பிக்கை துரோகம்..
வெறுப்பு,பொறாமை,அலட்சியம்,மரியாதை, 
ஆற்றாமை, சலிப்பு,பிரமிப்பு, 
அன்பு, கருணை, அர்ப்பணிப்பாகிய
நிறுத்தங்களையும் - கடந்து 
ஞானமெனும் இலக்கையடைவதற்குள்
அறியாமையில் இடைப்பட்ட நிறுத்ததில் 
இறங்குமறிவு....
ஞான நிறுத்தத்தை
சேரும் முயற்சி
நாளும் தொடர்கிறது..!

நீளும்
இப்பயணமும் முடிவதெப்போது
நானும்
இலக்கையடைவதெப்போது...?
அடையும் நாட்களுக்குள்
கடக்கும் நிறுத்தங்கள்தான்
மனம் கலங்காது காத்திடுமோ..?!!

16 comments:

  1. வணக்கம்
    தங்களின் கடின உழைப்பும். கலங்காத மனசும் சேர்ந்துதான் இத்தனை பதிவுகள் வெளியாகியுள்ளது.தங்களின் இந்த பயணம் தொடரட்டும் 250வது பதிவுக்கு எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி நண்பரே..தங்களைப் போன்ற அன்புள்ளங்களின் ஊக்கமும், வாழ்த்தும் எமது படைப்புகள் மெருகேற உதவட்டும்..நன்றி.._/\_

      Delete
  2. 250 ஆவது பதிவுக்கு மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா...எமக்கான தங்களின் வாழ்த்துகள் என்றும் தொடரவேண்டுகிறேன். மிக்க மகிழ்ச்சி ஊக்கமும், வாழ்த்தும் எமது படைப்புகள் மெருகேற உதவட்டும்..நன்றி.._/\_

      Delete
  3. கவிதையும் நல்லா இருக்கு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. 250ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி சகோ...தங்களைப் போன்ற அன்புள்ளங்களின் தொடர்ந்த ஊக்கமும், வாழ்த்தும் எமது படைப்புகள் மெருகேற உதவட்டும்..நன்றி.._/\_

      Delete
  5. அக்கா...
    250வது பதிவுக்கு வாழ்த்துக்கள்...
    தொடர்ந்து கலக்குங்க...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தம்பி...தம்பியின் ஊக்கமும், வாழ்த்தும் என்னுடைய படைப்புகள் மெருகேற உதவட்டும்.. நன்றி.._/\_

      Delete
  6. வளர்க மேலும்! கவிதை வரைக நாளும்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா...._/\_ எமக்கான தங்களின் வாழ்த்துகள் என்றும் தொடரவேண்டுகிறேன். தங்களது அறிவும், அனுபவமும் எமது படைப்புகள் மெருகேற உதவட்டும்..நன்றி.._/\_

      Delete
  7. 250 ku vaqzhthukkal!
    intraya kavithaiyim nantru!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்திற்கும், தொடர்ந்த ஊக்கத்திற்கும் மிக்க நன்றியும், மகிழ்ச்சியும் சகோ..:)

      Delete
  8. உங்கள் நீண்ட பயணத்தில் யாமும் சுவாசிதிருகிறோம் உங்கள் தூரிகை மென்மையான கவிதைகளை படைப்புகளை தாருங்கள்.....

    வாழ்த்துக்கள் அக்கா...

    தீயை வரைந்து விட்டதே
    உயிர்வந்து உன் தூரிகை பற்றி கொள்ளப்போகிறது

    :வைரமுத்து :)))

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி தம்பி...தொடர்ந்திருக்கவும்..:) நன்றி..

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__