முகப்பு...

Thursday 8 August 2013

முரண்...

சிரிப்பில் ஒளிந்திருக்கும்
அழுகை..
அழுகையில் ஒளிந்திருக்கும்
சிரிப்பு..
அன்பில் ஒளிந்திருக்கும்
கயமை...
இரக்கத்தில் ஒளிந்திருக்கும்
ஏளனம்...
கோபத்தில் ஒளிந்திருக்கும்
அன்பு...
சகிப்புத்தன்மையில் ஒளிந்திருக்கும்
வெறுப்பு...

மகிழ்ச்சியில் ஒளிந்திருக்கும்
சோகம்..
பசியில் ஒளிந்திருக்கும்
வறுமை...
பணத்தில் ஒளிந்திருக்கும்
கருணை...
நட்பில் ஒளிந்திருக்கும்
விரோதம்..
பாசத்தில் ஒளிந்திருக்கும்
சூழ்ச்சி...
உறவில் ஒளிந்திருக்கும்
பகைமை...

உதவியில் ஒளிந்திருக்கும்
எதிர்பார்ப்பு...
நம்பிக்கையில் ஒளிந்திருக்கும்
சந்தேகம்...
முரண்கள் அனைத்தையும்
முடிவின்றி கற்கின்றோம்..!!

8 comments:

  1. ஒன்றிற்குள் ஒன்றாக ஒளிந்திருக்கும்
    ஒவ்வொன்றும் ஒருசமயம் இனித்திருக்கும்
    இனித்திருக்கும் பொருள் கூட கசந்திடலாம்
    பொருள் மட்டும் புரிந்துவிட்டால் உயர்ந்திடலாம்!..

    ReplyDelete
  2. முரண்கள் அனைத்தும் அருமை...
    அருமை அக்க....

    ReplyDelete
  3. முதன்முதலாய் ஓர் வலை
    முரண் சுமந்த வரிகளோடு
    முகவரி தந்தது...!

    வந்ததும் வாழ்த்துச் சொல்ல
    வார்த்தைகள் தேடுகின்றேன்
    நடைமுறையில் நாம் காணும்
    விடைகள் புதைந்த வாழ்வின்
    நிதர்சனக் கவியினைப் வாழ்த்த...!

    அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாங்க தோழர்..தங்கள் வருகைக்கும் இனிய கருத்திற்கும் நன்றி..:)

      Delete
  4. முரண்களோடு தொடர்கிறது வாழ்க்கை....

    ReplyDelete
    Replies
    1. உண்மை தோழர்..தொடரும் முரண்பட்ட சிந்தனைகள்..:)

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__