முகப்பு...

Friday 2 August 2013

உணராத அன்பு...!!!

காக்கைக்கான
உணவைத் தனக்கென கருதும்
நாயாய்...
எங்கோ
யாருக்கோ
பரிமாறப்படும்
அன்புவார்த்தைகளை..
தனக்கென எண்ணி
ஏமாறும் மனம்..!!!
உயிர்காக்கும்
நீரும்
மூழ்கியவரை மீட்டெடுக்க
மூன்றுமுறை வழிகொடுக்க...
உணர்வுகாக்கும்
மனமதுவோ
எங்கோ
யாராலோ
கணக்கின்றி
காயப்பட்டு
மரத்துப்போகிறது
நித்தமும்
நிராகரிக்கப்படும்
அன்புகளால்..!!!

7 comments:

  1. யதார்த்தமான கவிதை தோழி!
    ஒவ்வொரு வரிகளும் நெஞ்சில் ஆழப் பதிந்துவிட்டது.

    // எங்கோ
    யாருக்கோ
    பரிமாறப்படும்
    அன்புவார்த்தைகளை..
    தனக்கென எண்ணி
    ஏமாறும் மனம்..!!!//

    கண்களில் இருந்து வழியும் நீரைக் கட்டுப்படுத்த முயல்கின்றேன்...

    வாழ்த்துக்கள்!

    த ம.2

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி தோழி..தங்கள் வாழ்த்து எமது எழுத்தை வளப்படுத்தட்டும்..:)

      Delete
  2. அன்பு காட்டுவதற்கோ நட்பு பாராட்டுவதற்கோ யாருக்கும் நேரம் இல்லை, மனமும் இல்லை... முடிந்தவரை நாம் முந்திக்கொண்டு அன்பைக் காட்டுவோம்.... நன்றி..

    ReplyDelete
    Replies
    1. @அன்புசெலுத்த முந்துவோம்...:) நல்ல கருத்து வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி தோழமையே..

      Delete
  3. யதார்த்தமான கவிதை.

    முதல் படம் மிக அருமை.....

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__