முகப்பு...

Tuesday 6 August 2013

ஆறாத காயங்கள்..!!

ஆறிப்போனதாய்
எண்ணிய காயங்கள் 
நமைச்சலினால்
உயிர்பெற்று
இரத்தக்கசிவுடன் வலி
ஏற்படுத்துவதுபோல்...

மறக்கப்பட்டதாய்
நினைக்கப்படும்
மனக்காயங்கள்...
ஆங்காங்கு
எங்கோ நிகழும்
ஏதோ நிகழ்வுகள்
எதையோ நினைவூட்ட..
மற(த்த)ந்த உணர்வுகள்
உயிர்பெற்று
காய்ந்ததாய்
கருதப்பட்ட
மனக்காயங்களுக்கு
புத்துயிரளித்து
புதுப்பொலிவுடன்
புதியதோர் காயத்தையளித்து
மாயத்தை ஏற்படுத்தும்
நிகழ்காலம்.......!!



10 comments:

  1. காலமும் மாறுமே!
    காயமும் ஆறுமே!..
    கண்ணீரைச் சிந்தாதே - விழியே!
    காலமும் காட்டுமே - நல்வழியே!..

    ReplyDelete
    Replies
    1. கருத்தே கவிதையாய்..அருமை தோழர்..:)

      Delete
  2. ஆறாத காயங்கள் அருமை அக்கா....

    ReplyDelete
  3. ஆறாத காயங்கள்......

    நல்ல கவிதை.....

    ReplyDelete
  4. வருவதும் போகும் மிகையல வாழ்வில்
    தருவதுங் காய்வது மாம்!

    வருவதும் போகும் தோழி!

    நல்ல கவிதை! வாழ்த்துக்கள்!

    த ம.3

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழி..தங்களுடைய குரள் வெண்பாக்கள் அருமை..:)

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__