முகப்பு...

Sunday 4 August 2013

முரண்பட்ட சிந்தனைகள் - தொடர்ச்சி...

வார்த்தைகளால் கொல்லும் மனம்..
வார்த்தைகளால் கொள்ளும் மனம்..

*****

வார்த்தையால் ஏற்படும் காயங்களுக்கு 
   மௌனத்தால் மருந்திடும் மனம்.

மௌனத்தால் ஏற்படும் காயங்களுக்கு 
   வார்த்தையால் மருந்திடும் மனம்.

*****

தன் உணர்விற்கு மதிப்பளித்து..

  பிறர் உணர்வை எரிக்கும் மனம்..


பிறர் உணர்விற்கு மதிப்பளித்து

  தன் உணர்வை எரித்துக்கொள்ளும் மனம்..

*****

அன்பை மறைத்து கோபத்தை வெளிக்காட்டும் மனம்..

கோபத்தை உள்ளடக்கி அன்பை வெளிக்காட்டும் மனம்..

*****

சோகத்திலும் மகிழ்ச்சியைப் பிரதிபளிக்கும்  மனம்..

மகிழ்ச்சியிலும் சோகத்தையே பிரதிபளிக்கும்  மனம்..

*****



10 comments:

  1. மனங் கூறிடும் மந்திரம் நன்றே
    இனங் கண்டிடு இன்று!

    சிந்தனைக்குச் சிறப்பான கவிதைகள் தோழி!

    வாழ்த்துக்கள்!

    த ம.1

    ReplyDelete
  2. மனித மனத்தின் முரண்பாடுகளை அழகான கவிதை அக்கி இருக்கிறீர்கள். வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி தோழர்

      Delete
  3. சிறப்பான சிந்தனை.....

    த.ம. 3

    ReplyDelete
  4. வணக்கம்!

    மனம் பற்றிய மகிழ்வான மதிப்பு!
    வாழ்த்துக்கள்!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    த ம.4

    ReplyDelete
    Replies
    1. வாங்க தோழர்..தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி..:)

      Delete
  5. //பிறர் உணர்விற்கு மதிப்பளித்து தன் உணர்வை ஒளித்துக் கொள்ளும் மனம்!..// இது நன்றாக இருக்கின்றதா!...
    வான் மழைத் தூறல் தனைப் போல்
    வார்த்தைகளின் தூறல்!...
    அருமை! .. அருமை!..

    ReplyDelete
    Replies
    1. வாங்க ...தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றியும், மகிழ்ச்சியும்..:) //தன் உணர்வை ஒளித்துக் கொள்ளும் மனம்!.// மிகவும் நன்று..:)

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__