முகப்பு...

Saturday 10 August 2013

பிரமிக்க வைக்கும் இயற்கை...





வாய் நிறைய 
வழியும் பாலுடன்
அன்னையின் முகம் நோக்கி
புன்னகை சிந்தி
உதட்டோடு உதட்டால் 
முத்தமிட 
தாய்மையை பூரிப்படையச் செய்யும்
பால் மணம் மாறா 
ஈர முத்தம்..!!
--
தேவைக்கதிமாய்
தாயிடம் 
தானருந்திய பாலை
உதட்டோரம் வழியவிட்டு
சிரித்து விளையாடும் 
குழந்தையின் அழகு...!!
--

9 comments:

  1. தலைப்பும் படைப்பும் படமும் அருமை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி ஐயா...நன்றி.._/\_

      Delete
  2. தாயும் அழகு..
    தாய்மையும் அழகு!
    மழலையும் அழகு..
    மலர்ந்த கவிதையும் அழகு!..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தும் அழகு தோழரே...வாழ்க வளமுடன்..:)

      Delete
  3. கவிதாயினி என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கச்செய்யும் பதிவுகளில் இதுவும் ஒரு மகுடம்... அருமை... அருமை அக்கா...

    ReplyDelete
    Replies
    1. ஹஹா..தம்பீ...நன்றி...கவி + தா + இனி யா...?? :)

      Delete
  4. படத்திற்கேற்ற கவிதை.... குழந்தை, தாய் இரண்டு பேரின் மகிழ்ச்சியும் கவிதை படித்த எங்களுக்குள்ளும்.....

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சியும், நன்றி தோழர்..:)

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__